எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.21 - தமிழக அரசின் சாதனைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த சாதனைகளைப்பற்றி அமெரிக்க மக்களுக்கு எடுத்துரைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்காவுக்கு வருகை தரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதியம் 2.10 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் அவர், மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து உரையாடினார். அரசியல் சமூக, பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு ஹிலாரி கிளிண்டன் பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் பல தடைகளைக் கடந்து முதல்வர் செய்த சாதனைகளையும் அவர் பாராட்டினார். பெரும் வெற்றிக் கதைகளை கொண்ட பெரும் ஆளுமைமிக்க தலைவரான ஜெயலலிதாவுடன் பேசுவதற்கு ஙிஹிலாரி ஆவல் தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா நினைவு கூர்ந்தார். இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரும் வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா திகழ்கிறது என்றும் 30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொழில் சேவைகளை 200-10-ல் இந்தியா ஏற்றுமதி செய்தது. 2009-ல் 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சேவைகளை இந்தியா இறக்குமதி செய்துள்ளது என்றும் எதிர்காலத்தில் அமெரிக்க சேவைகளின் இந்திய இறக்குமதி அதிகரிக்கும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் பிரிவில் அமெரிக்கா முதலீடு செய்வதற்கு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.
இதுபோன்ற தொழில்துறைகளில் தமிழ்நாடு - அமெரிக்கா இரு தரப்பும் இணைந்து பணியாற்ற முடியும். இதுகுறித்த கொள்கையை உருவாக்குதல், சிறு மற்றும் மத்திய நிறுவனங்களை பயன்படுத்துதல், உலக சப்ளை சங்கிலி நிர்வாக முறைமையை ஆட்டோமோட்டிவ் துறையில் பலப்படுத்தல் குறித்து முதல்வர் விவாதித்தார்.
சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் தமிழ்நாட்டில் உள்ள விரிவான வாய்ப்புகள் குறித்தும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
தலா 300 மெகாவாட் உற்பத்தி செய்யும் 10 சூரிய சக்தி மின்சார பூங்காக்களை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதையும் முதல்வர் ஜெயலலிதா எடுத்துரைத்தார். தமிழ்நாடு அரசும் அமெரிக்க அரசும் இந்த துறையில் இணைந்து செயலாற்ற முடியும். இத்துறையில் அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
அறிவுத்துறையில் - குறிப்பாக தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2011-2020 காலகட்டத்தில் 10 முதல் 12 மில்லியன் பணிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 4 மடங்காக உயரும் என்பதால் அது உறுதிபடுத்தப்படும். இது அறிவுத்துறையை மேம்படுத்த தமிழக அரசும், அமெரிக்க அரசும் கைகோர்த்து செயல்பட முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதுபோன்ற இணைந்த செயல்திட்டங்களில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளதாக ஹிலாரி கிளிண்டன் கூறினார்.
தொழிற்துறை வளர்ச்சியில் சாலைபோக்குவரத்து பெரும்பங்கு வகிக்கின்றது. 2.1 லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு 15-20 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 2020-ம் ஆண்டு வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் எடுத்துக் கூறினார். சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பெரும் வாய்ப்புகள் உள்ளன. இதில் தமிழக அரசும், அமெரிக்க அரசும் இணைந்து செயல்பட முடியும் என்று முதல்வர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் ஓவர்சீஸ் பிரைவேட் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் என்ற தகவலை ஹிலாரி கிளிண்டன் முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவின் செயல்திறனுள்ள தலைமையில் இதுபோன்ற பல பெரிய முதலீடுகளை தமிழ்நாட்டில் செய்வதற்கு அமெரிக்கா ஆர்வமாக உள்ளதாக ஹிலாரி கூறினார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் எச்.1.பி விசாக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டினார். 65 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள ஒதுக்கீட்டை 1 லட்சத்து 95 ஆயிரமாக உயர்த்தவேண்டும். விசா விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படுவது குறித்தும் சுட்டிக்காட்டினார்.
இந்த விவாதத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்தும், முதல்வர் ஜெயலலிதா ஹிலாரியிடம் பேசினார். இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், இலங்கை தமிழர்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பது குறித்தும், அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று வாழ்வதற்கு முடியாத நிலை குறித்தும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். இந்த உணர்வை பகிர்ந்து ஏற்றுக்கொண்ட ஹிலாரி கிளிண்டன், இலங்கை தமிழர்களின் முகாம்களில் இருந்து விரைவில் சொந்த வீடுகளுக்கு திரும்ப அமெரிக்க அரசு நுட்பமான - ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான தமிழக அரசின் முன்னோடி திட்டங்களை அறிய அமெரிக்க குழுவினர் ஆர்வம் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் பெரும் சாதனைகளை அறிய தமிழக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்கா வருமாறு ஹிலாரி அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பு ஒரு மணிநேரம் நடைபெற்றது. அமெரிக்கக் குழுவில் துணை அமைச்சர் பாப் பிளேக், உலக பெண்கள் விவகாரத்திற்கான தூதர் மெலன்வெர்வீர், இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பீட்டர் பர்லேக், சென்னை - அமெரிக்க துணை தூதரகத்தின் ஆண்ட்ரூ டீ சிம்கின், அமெரிக்க அமைச்சகத்தின் துணை தலைமை அலுவலர் ஹியுமா ஆபிதீன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
படியில் ஏறிவந்த ஹிலாரி கிளிண்டன்
நேற்று சென்னை வந்த ஹிலாரி கிளிண்டன் கோட்டையில் ஜெயலலிதாவை சந்திக்க வந்தபோது அவரை பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயின் வாசலில் வரவேற்று லிஃப்ட் மூலம் செல்ல அழைத்தபோது ஹிலாரி கிளிண்டன் படிக்கட்டு வழியாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வந்தார்.
அவரை முதல்வர் ஜெயலலிதா வாசல் அருகே வந்து வரவேற்றார். இந்த சந்திப்பின்போது நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலாளர் தேவந்திரநாத் சாராங்கி மற்றும் அமெரிக்கா தூதரக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
23 Apr 2024சென்னை, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.