முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றே தீரும்- செல்லூர் ராஜூ உறுதி

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூலை.- 28 - தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றே தீரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதிபடக்கூறினார். மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- மதுரை மண்ணில் ஆட்டம் போட்டவர்கள் எவரும் நிலைத்ததில்லை. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பட்டினத்தில் ஆட்டம் போட்டவர்,ஆடிப்போவார் என்பதற்கு மு.க. அழகிரி ஒரு உதாரணம். மதுரை மண்ணில் வீரவசனம் பேசி ரவுடிகள் ராஜ்யத்தை நடத்திய மத்திய மந்திரி மு.க. அழகிரியும் அவரது கும்பலும் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தைரியம் இருந்தால் அவர்கள் வெளியே வந்து பேசலாம். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்களின் அமோக ஆதரவுடன் அ.தி.மு.க. வெற்றிபெற்று மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்றியது. மதுரை மண் முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டை என்பதை இந்த வெற்றி நிரூபித்துக்காட்டியுள்ளது. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நாம் எதற்கும் அஞ்ச வேண்டாம். முதல்வரின் ஜெயலலிதாவின் தலைமையில் அணிவகுத்து செல்வோம். சட்டசபை தேர்தலைப்போல உள்ளாட்சி மன்ற தேர்தல்களிலும் வெற்றிபெற்று மதுரை மண், முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டை என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளையும் அ.தி.மு.க. அணி கைப்பற்றியது என்ற புதிய வரலாற்றை வரும் உள்ளாட்சி தேர்தலில் படைக்க வேண்டும்.
ஈழத்தில் தமிழன் படுகொலை செய்யப்பட்டதை முதலில் கண்டித்தவர் ஜெயலலிதா ஒருவர்தான். ராஜபக்சே நடத்திய படுகொலையை கண்டித்து அவரை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றி கண்டித்த வீரமிக்க பெண்மணி. இந்தியாவின் இரும்பு பெண்மணி முதல்வர் ஜெயலலிதா ஒருவர்தான். உலக தமிழர்களை காப்பதற்கு குரல் கொடுக்கக்கூடிய ஒப்பற்ற தலைவி தமிழ் இனத்தை தமிழ் மக்களை உலக அளவில் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவி முதல்வர் ஜெயலலிதா ஒருவர்தான். உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் அவர் மீது அபரீதமான நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனவே அனைவரும் முதல்வர் ஜெயலலிதா மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கஷ்டப்பட்டு உழைத்தவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அவர் உதவி செய்வார். முதல்வர் ஜெயலலிதாவை நம்பாமல் கெட்டவர்களும் உண்டு. ஆனால் நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை. எனவே எல்லோரும் அவரது தலைமையில் அணிவகுத்து வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அமோக வெற்றியை பெற்று ஜெயலலிதாவின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago