முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் பதுங்கியிருந்த பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.தமிழரசு கைது

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஜூலை.- 28​- சேலம் அருகே நில அபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த பா.ம.க.முன்னாள் எம்.எல்.ஏ.வை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளாவில் கைது செய்தனர். ஓமலூர் அருகே உள்ள கருத்தானூரைச் சேர்ந்தவர் மாதையன். இவர் தனக்கு சொந்தமான 1.58 ஏக்கர் நிலத்தை முன்னாள் பா.ம.க.எம்.எல்.ஏ.தமிழரசு, ராஜம்மாள், கண்ணுப்பிள்ளை, கண்ணம்மாள், மாணிக்கம்,ரத்தினம் ஆகிய 6 பேர் போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்துவிட்டதாகவும் அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி  சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனிடம் புகார் கொடுத்தார். இது குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவிற்கு எஸ்.பி.உத்தரவிட்டார். அதன் பேரில் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பா.ம.க.முன்னாள் எம்.எல்.ஏ.தமிழரசு உள்பட 6 பேர் நில அபகரிப்பில் ஈடுப்பட்டிருந்தது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜம்மாள்,கண்ணுப்பிள்ளை, கண்ணம்மாள் ,மாணிக்கம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

பா.ம.க.முன்னாள் எம்.எல்.ஏ.தமிழரசு,ரத்தினம் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் முன்னாள் பா.ம.க.எம்.எல்.ஏ.தமிழரசு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, மற்றும் போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர்.

இதே போல் ரத்தினத்தையும்  போலீசார் நேற்று கைது செய்து ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்