முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட திமுக செயலாளர் மீது மேலும் ஒரு வீடு அபகரிப்பு புகார்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூலை.- 28 - மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி திருமங்கலத்தில் நிலமோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் மதுரை தியாகராஜர் காலனியை சேர்ந்த கழுவத்தேவர்(80) என்பவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அஸ்ராகார்க்கிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, நான் மீனாட்சி மில்லில் வேலை செய்தேன். தியாகராஜர்காலனியில் வாடகைக்கு எனக்கு வீடு ஒதுக்கப்பட்டது. இந்த வீட்டை கிரயமாக முடித்துக்கொள்ளுமாறு தெரிவித்தனர்.
   வீட்டுக்கு ஒரு பங்கு தொகையை கட்டி முடித்துவிட்டேன். தொடர்ந்து அந்த வீட்டில் வசித்து வந்தேன். கடந்த 2007 ம் ஆண்டு வட்டியுடன் சேர்த்து மீதிதொகையையும் செலுத்தி விட்டேன். இதற்கிடையே மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி, ஆறுமுகசாமி, கிருஷ்ணபாண்டி, ராமர், ரவிச்சந்திரன்,  ராஜேந்திரன் மற்றும்  கூலிப்படையினர் சேர்ந்து எனக்காக ஒதுக்கப்பட்ட வீட்டை அபகரித்து விட்டனர். நான் குடியிருந்த வீட்டை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த மனு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்