முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்லூர் கே.ராஜூவுடன் அஸ்ஸாம் கூட்டுறவுத்துறை அமைச்சர் சந்தித்து ஆலோசனை

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 28 - கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வை அஸ்ஸாம் மாநில கூட்டுறவு மற்றும் எல்லைப்பகுதி வளர்ச்சித்திட்ட அமைச்சர் சித்திக் அக்மத் சந்தித்தார். இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாலை 3.00 மணியளரில் அஸ்ஸாம் மாநில கூட்டுறவு மற்றும் எல்லைப்பகுதி வளர்ச்சித்திட்ட அமைச்சர் (தனி பொறுப்பு) சித்திக் அகமத் சந்தித்தார். அப்போது தமிழக முதல்வரின் இலவச அரிசி திட்டம் மற்றும் மாநிலத்திலுள்ள கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர். இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலர் யத்தீந்திர நாத் ஸ்வேன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ப.அண்ணாமலை, கூடுதல் பதிவாளர்கள், ந.அசோகன், க.பு.பெ.பன்னீர்செல்வன், அ.சங்கரலிங்கம், இரா.ஜெயராம், இரா.ராஜேந்திரன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்