முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டூவீலரில் வாகனம் மோதியதில் சிறுமி உட்பட 2 பேர் பலி

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,ஜூலை.29 - திருப்பரங்குன்றம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பள்ளி சிறுமி உட்பட 2 பேர் பலியானார்கள். திருப்பரங்குன்றம் அருகே உள்ளது கூத்தியார்குண்டு. இந்த பகுதியை சேர்ந்த நரசிம்ம பல்லவன்(30), திருநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் தனது அண்ணன் மகள் மாயவர்த்தினி(7), அவளது தம்பி உத்ரா(5), மற்றும் நீதிமலைராஜன், வெங்கடேஷ் ஆகிய குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது நேதாஜி நகர் என்ற பகுதி அருகே வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் நரசிம்ம பல்லவன் மற்றும் மாயவர்த்தினி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த மற்ற அனைவரும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago