முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்-மழைக்கு 25 பேர் பலி

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

மணிலா,ஜூலை.29 - பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த புயல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் புயல் மேலும் வலுவடைந்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகளுக்குள் புகுந்தது. அங்கிருந்த 6 லட்சத்து 4 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் மழைக்கு நாட்டின் வடக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்டதால் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. நாக் டென் என்று பெயரிடப்பட்டுள்ள புயலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள். அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி அவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று புயலில் சிக்கி கொண்டனர். மேலும் 31 பேரை காணவில்லை. தொடர்ந்து மழை நீடிப்பதால் மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பகுதியில் உள்ள லூசோன் விமான நிலையத்துக்கு வரும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago