முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விற்ற நிலத்தை மீண்டும் அபகரிக்க முயன்றவர் கைது

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

ந்தமல்லி, ஜூலை.29 - ஏற்கனவே விற்ற நிலைத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து மீண்டும் விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். சென்னை தியாகராய நகர் வித்யாலயா தெருவைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் புறநகர் போலீஸ் கமிஷனர் கரன்சின்காவிடம் ஒரு புகார் அளித்தார். அதில் நான் குன்றத்தூர் பழந்தண்டலம் கிராமத்தில் 1995-ம் ஆண்டு கணேசமூர்த்தி என்பவரிடம் நிலத்தை வாங்கினேன். தற்போது அந்த நிலத்தை போலி ஆவணம் தயாரித்து சந்திரசேகர் என்பவர் அபகரிக்க முயற்சிக்கிறார் என்று கூறியிருந்தார்.  கமிஷனர் உத்தரவுபடி ந்தமல்லி உதவி கமிஷனர் முருகேசன் அறிவுரைப்படி குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி பம்மல் அண்ணாநகரைச் சேர்ந்த சந்திரசேகரை (வயது50) கைது செய்தனர். 

விசாரணையில் 1987​ம் ஆண்டு தனது 152 சென்ட் நிலத்தை கணேசமூர்த்தி என்பவருக்கு பவர் வழங்கி விற்கச் சொன்னார். அவர் அதனை 1995-ம் ஆண்டு 15 பேருக்கு விற்று பணத்தை கொடுத்துள்ளார். இதில் மணிமாறனுக்கு விற்கப்பட்ட 76 சென்ட் நிலத்தை சந்திரசேகர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து இன்னொருவருக்கு விற்க முயன்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து அபகரிக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்திரசேகர் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்