முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்க மேலும் அவகாசம்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.29 - சமர்ச்சீர் கல்விக்கான புத்தகங்களை ஆகஸ்டு மாதம் 5-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வரும் செவ்வாய்கிழமை நடைபெறும். 

சமச்சீர் கல்வியை தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேலும் முறையீடு செய்தது. இந்த அப்பீல் மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம்கோர்ட்டில் 3-வது நாளாக நடைபெற்றது. அப்போது பெற்றோர் தரப்பில் கருத்துக்கள் எடுத்துவைக்கப்பட்டன. புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,சமச்சீர் புத்தகங்களை வழங்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக கோர்ட்டில் தெரிவித்தார். இதையடுத்து சமச்சீர் கல்விக்கான புத்தகங்களை வழங்குவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டது. அதன்படி வரும் ஆகஸ்டு 5-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்குமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் செவ்வாய் அன்று நடக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago