முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி திமுக கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி கைது

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூலை.- 30 - போலி ஆவணம் மூலம் 12 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக மதுரை மாநகராட்சி திமுக கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி நேற்று கைது செய்யப்பட்டார்.   தமிழகம் முழுவதும் கடந்த ஆட்சியின் போது திமுகவினர் அப்பாவி மக்களை மிரட்டி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்தனர். இது குறித்து போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதற்காக ஒரு பிரிவை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்கள் இந்த பிரிவில் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தனிபிரிவில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திமுகவினர் மீது புகார் கூறி வருகிறார்கள். மதுரையில் நிலம் மற்றும் வீடு அபகரிப்பு செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுகவை சேர்ந்து வேளாண் விற்பனைக்குழு முன்னாள் தலைவர் அட்டாக் பாண்டி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ், திருப்பரங்குன்றம் முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ணபாண்டி, கொடி சந்திரசேகரன், ஜீவா நகர் பகுதியில் நில மோசடியில் ஈடுபட்டதாக திமுக பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ராமலிங்கத்தின் தம்பி ஆர்.எஸ்.கணேசன், கே.கே.நகரில் ரூ. 50லட்சம் மதிப்புள்ள வீட்டை அபகரித்ததாக ராமநாதபுரம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ முருகவேலின் தம்பி உள்ளிட்ட ஏராளமானார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
   இந்த நிலையில் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் திமுக வை சேர்ந்த வி.கே.குருசாமி மீது மதுரை அதிமுகவை சேர்ந்த  ராஜபாண்டி என்பவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் வைகை கரையோரம் உள்ள 12 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்துவிட்டதாகவும் அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் நில அபகரிப்பு தொடர்பாக 2 புகார்கள் வி.கே.குருசாமி மீது கொடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மதுரை குற்றப்பிரிவு போலீசார் நேற்று இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக வி.கே.குருசாமியை அழைத்து சென்றனர். அங்கு மாலை வரை விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து வி.கே.குருசாமி கைது செய்யப்ப்ட்டு மதுரை ஜேஎம்1 கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் விசாரித்து வி.கே.குருசாமியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து வி.கே.குருசாமி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்