எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஜூலை.- 31 - சேலத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு தொடர்பாக வந்த புகாரை அடுத்து முன்னாள் தி.மு.க.அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். இதையறிந்த தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுப்பட்டு 10 க்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். கடந்த தி.மு.க.ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர்கள் நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஈடுப்பட்டதை பத்திரிக்கைகள் வெளியிட்டன. ஆனால் ஆட்சி அதிகாரம் அவர்களிடம் இருந்தத்தால் போலீசாரால் அவர்களை கைது செய்ய முடியவில்லை.பாதிக்கப்பட்ட பொதுமக்களும் புகார் கொடுக்கமுடியாமல் ஊமையாகவே இருந்தனர்.இந்த நிலையில் கடந்த தேர்தலில் தி.மு.க.ஆட்சி அகற்றபட்டு அ.தி.மு.க.வின் ஆட்சி அமைந்தது.தேர்தல் பிரச்சாரத்தின்போதே தமிழக முதல்வர் ஜெயலலிதா தி.மு.க.வின் ஆட்சியில் நிலம் அபகரிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டவர்களின் நிலம் மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நில மோசடி குறித்தான வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் நில அபகரிப்பு மீட்பு பிரிவு என்ற தனிப்பிரிவு போலீசை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார்.
இந்த நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவிற்கு இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான நில அபகரிப்பு புகார் ஆட்சி அதிகாரித்தில் இருந்த தி.மு.க.வினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். அதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பலரை கைது செய்து வருகின்றனர். சேலம் உள்ளிட்ட சில இடங்களில் நிலத்தை மீட்டு உரியவர்களிடமும் ஒப்படைத்துள்ளனர். போலீசாரின் இந்த உண்மையான நடவடிக்கையை கண்டு இந்த தனிப்பிரிவிற்கு தற்போது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது தம்பி மகனும் 6 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் சுரேஷ்குமார், உறவினர் கவுசிகnullபதி உள்ளிட்ட பலர் மீது ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவேமுன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு மற்றும் பிரிமியல் ரோலர் மில் விற்பனை ஆகிய பிரச்சனைகளில் புகாரின் அடிப்படையில் முதல் குற்றவாளியாக போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் அவர் சென்னை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றார். பின்னர் ஐ கோர்ட் உத்தரவு படி கடந்த 25 ந் தேதி சேலம் மாநகர நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு போலீசாரிடம் சரணடைந்தார்.பின்னர் போலீசார் அவரை 3 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தி கடந்த புதன் கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். ஆனால் தினமும் கோர்ட் உத்தரவு படி காலை 8 மணிக்கு மாநகர டவுன் காவல் நிலையத்தின் உள்ளே உள்ள நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு போலீசார் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமோகன்ராஜ்(54) என்பவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் தனக்கு சொந்தமான 20,460 சதுர அடி நிலம் சேலம் நிலவாரப்பட்டியில் சுகம் மெட்ரிக் பள்ளி அருகில் இருப்பதாகவும் கடந்த 2007 ஆம் ஆண்டில் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தூண்டுதல் பேரில் அவரது உறவினர் கவுசிக nullபதி பெயருக்கு ரூ.40 லட்சத்திற்கு மிரட்டி பவர் எழுதி வாங்கி நிலத்தை அபகரித்து விட்டதாகவும் கூறி வீரபாண்டி ஆறுமுகம், அவரது உறவினர் கவுசிக nullபதி, தம்பி மகனும், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவருமான பாரப்பட்டி சுரேஷ்குமார்,பத்திர எழுத்தார் சுந்தரம், தி.மு.க.பிரமுகர் நாராயணன் மற்றும் சிலர் என 8 பேர் மீது புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாநகர நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் உதவி கமிஷனர் பிச்சை, இன்ஸ்பெக்டர் மணிவாசம் மற்றும் போலீசார் 147(நான்கு பேருக்குமேல் சட்ட விரோதமாக கூடுதல்), 447(அச்சுறுத்துதல்) 506/1(கொலை மிரட்டல் விடுத்தல்)386,மற்றும் 387 உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
நேற்று காலை 8 மணியளவில் தனது வழக்கறிஞர் மூர்த்தி, உதவியாளர் சேகர் ஆகியோருடன் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த வீரபாண்டி ஆறுமுகம் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே செல்ல கிளம்பும் போது போலீசார் அவரை கைது செய்வதாக அறிவித்தனர். உடனே அவரது வக்கீல் மூர்த்தியும், உதவியாளர் சேகரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.இதையடுத்து இந்த தகவல் தி.மு.க.வினரிடையே பரவியது உடனே அவர்கள் டவுன் காவல் நிலையம் முன்பு திரண்டு போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது டவுன் காவல் நிலையம் முன்பு பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அப்போது மாநகர துணை போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா அங்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் போலீசார் தி.மு.க.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்வதாக அறிவித்தனர்.பின்னர் அவரை வேனில் ஏற்றி மாஜிஸ்திரேட் வீட்டிற்கு அழைத்து செல்ல போலீசார் முயன்றனர்.இதை பார்த்த தி.மு.க.தொண்டர்கள் உடனே போலீஸ் வேன் முன்பு படுத்து திடீர் மறியலில் ஈடுப்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த உடனே தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவர் நன்றாக இருப்பதாக உறுதியளித்ததை அடுத்து சேலம் அய்யந்திருமாளிகையில் உள்ள சேலம் கோர்ட் எண் 4 மாஜிஸ்திரேட் ஸ்ரீவித்யா வீட்டில் ஆஜர்படுத்தினர் .வழக்கை விசாரித்த ஜட்ஜ் ஸ்ரீவித்யா அவரை வரும் 12 ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அப்போது மாஜிஸ்திரேட் வீடு முன்பு குவிந்த தி.மு.க.வினர் போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். உடனே போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது பதட்டம் ஏற்பட்டது. பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்தை வேனில் ஏற்றி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகளில் தொடர்பு உடைய தலைமறைவாக உள்ள கவுசிக nullபதி, பாரப்பட்டி சுரேஷ்குமார், பத்திர எழுத்தர் சுந்தரம், தி.மு.க.பிரமுகர் நாரயணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்ததும் மாநகரில் சேலம் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், கலெக்டர் அலுவலக ரவுண்டானா, 5 ரோடு, சூரமங்கலம், திருவாக்கவுண்டனூர் பை-பாஸ் உள்ளிட்ட இடங்களிலும், மாவட்ட அளவில் சில இடங்களிலும் தி.மு.க.வினர் கூட்டமாக கூடி அப்பகுதியில் கடைகளை அடைக்க சொல்லி ரகளையில் ஈடுப்பட்டனர். சேலம் பெரியார் மேம்பாலத்தில் சென்ற 2 டவுன் அரசு பஸ்களையும், திருவாக்கவுண்டனூர் பை-பாஸ் பகுதியில் வந்து கொண்டிருந்த 2 அரசு புநகர் பேருந்துகளையும், அழகாபுரம் பகுதியில் 2 பஸ்கள், அஸ்தம்பட்டி பகுதியில் 1 பஸ்கள் என மொத்தம் 10 க்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடிகளை உடைத்தனர். சில இடங்களில் சாலை மறியலிலும் ஈடுப்பட்டனர். இதில் 2 பெண் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுப்பட்டவர்களை கைது செய்தனர். மாநகரின் முக்கிய பகுதிகளான பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், ஜங்சன், கலெக்டர் அலுவலகம், 5 தியேட்டர் பகுதி, 5 ரோடு உள்ளிட்ட பகுதி ஙிபலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டனர். மாவட்ட அளவிலும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது. வீரபாண்டி ஆறுமுகம் கைதால் மாநகரம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டாலும் அந்த பரபரப்பை உடனடியாக போலீசார் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து மாநகரை இயல்பு வாழ்க்கைக்கு மாற்றினர். சேலம் மாநகர் மற்றும் மாவட்டங்களில் நேற்று மாலை வரை ரகளை மற்றும் வன்முறையில ஈடுப்பட்ட தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகர பொருளாளர் அன்வர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.
-
3-ம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்: தமிழக அரசு
17 Apr 2024சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ச
-
பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் : நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு
17 Apr 2024பெங்களூரு : நாட்டின் ஜனநாயகத்தை காக்க மோடியை வீழ்த்த வேண்டியது அவசியம் என்றும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் : அசாமில் பிரதமர் மோடி பிரசாரம்
17 Apr 2024கவுகாத்தி : 2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அமேதி, ரேபரேலி தொகுகளில் எதில் போட்டி? ராகுல் பதில்
17 Apr 2024காசியாபாத் : ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.
-
டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு பி.சி.சி.ஐ. திடீர் உத்தரவு
17 Apr 2024மும்பை : டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு பி.சி.சி.ஐ. கட்டளை போட்டுள்ளது.
சிக்கலாகவே...
-
பாரீஸ் ஒலிம்பிக் 2024: ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் தொடங்கியது
17 Apr 2024பாரீஸ் : பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, ஒலிம்பிக் ஓட்டம் தொடங்கியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.