முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலபறிப்பை விசாரிக்க தனி நீதிமன்றம்: தா. பாண்டியன்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

புதுக்கோட்டை,ஜூலை.- 31 - நிலப்பறிப்பு புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா. பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், நிலப்பறிப்பு புகார்கள் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கும் செயல் என்று கூறுவதை ஏற்க முடியாது. புகார்களுக்கு உள்ளாகும் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் அந்தந்த கட்சி தலைமையே உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்தால் பிரச்சினைகள் குறையும். சோமாலிய கடல் கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்திய கடற்படை தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. கச்சத்தீவை மீட்பதுதான் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்