முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பஸ் பள்ளத்தில் விழுந்து 10 பயணிகள் பரிதாப சாவு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர். ஜூலை.- 31 - காஷ்மீர் மாநிலத்தில் பயணிகள் பஸ் ஒன்று நீரோடை பள்ளம் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில்  10 பயணிகள் பரிதாபமாக பலியானார்கள்.மேலும் 42 பேர் படுகாயம் அடைந்தனர். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில்  உள்ள பிஜ்பெஹாரா என்ற இடத்தில் இருந்து பஹல்காம் என்ற சுற்றுலா தலத்திற்கு ஒரு பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது லங்கன்பால் என்ற இடத்தில் லிட்டர் நீரோடை  சென்று கொண்டிருந்த ஒரு கிடு கிடு பள்ளத்தில் பஸ் விழுந்து  விபத்துக்குள்ளானது.  இதில் 10 பேர் பலியானார்கள். மேலும் 42 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

பஸ் விழுந்த இடத்தில்  4 பேர் மட்டுமே பலியானார்கள்.  காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மேலும் 6 பேர் பலியானார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

பலியானவர்களில் ஒருவர் பெண். இருவர் குழந்தைகள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து  போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்