எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.2 - வில்லிவாக்கத்தில் உள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.200 கோடி மதிப்புள்ள 7 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்து முறைகேடாக விற்பனை செய்ததாக முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி மீதும் அவரது பி.ஏ. காகரின் என்பவர் மீதும் அறக்கட்டளை சொத்தை அபகரிக்க உதவியதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதும் கட்டடம் கட்ட பினாமியாக இருந்து செயல்பட்ட உதயநிதி ஸ்டாலின் மீதும் தர்மா தோப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.இது பற்றி விபரம் வருமாறு:-
வில்லிவாக்கத்திலுள்ள தர்மா தோப்பு அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.200 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.15 கோடி மதிப்பு என்று குறைத்து காட்டி அறக்கட்டளை நிலத்தை ஆண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். அந்த புகார் ஓராண்டு காலம் கிடப்பில் போடப்பட்டு கிடந்தது. இடையில் புகார் அளித்தவர்களை மிரட்டி நிலத்தை அபகரித்தும் வேலையும் நடந்தது.
இது பற்றி அறக்கட்டளை நிர்வாகிகள் முதல்ருக்கும், டிஜிபி ராமானுஜத்திற்கும் புகார் அளித்தனர். பின்பு முறைப்படி நேற்று சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகம் வந்து கமிஷனர் திரிபாதியிடம் புகார் அளித்தனர்.
அவர்கள் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
மேற்கண்ட டிரஸ்டின் டிரஸ்டியாக நான் உள்ளேன். சென்னை, வில்லிவாக்கம், பெரம்பூர்-புரசை தாலுக்காவில் அடங்கிய 7 ஏக்கர் 46 சென்ட் நிலம் 1875-க்கு முன்பாக அரசாங்கத்தால் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தர்மதோப்பு அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்ட பொது நிலம் ஆகும். டிரஸ்டிகளால் தர்மதோப்பில் சிவன்கோவில், அன்னதானம், மருத்துவசேவை, பசுசேவா, நிழல் தரும் மரங்கள் வளர்த்தல் உள்ளிட்ட பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு சிறப்பாக நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தர்மதோப்பு சொத்தின் மீது தனிநபர்களுக்கு போலி பட்டா வழங்கிய பெரம்பூர்-புரசை தாசில்தார்கள் மீது நடவடிக்கை கோரி மனு கொடுத்து இருந்தோம். அந்த மனு மீது போலீஸ் விசாரணை முடிந்து வெளிவந்தபோது கமிஷனர் அலுவலக வாசலில் காத்து இருந்த தி.மு.க. அமைச்சர் பரிதி இளம்வழுதி பி.ஏ.காகரின், வாசு ஆகியோர் சாப்பிட வா போகலாம் என என்னை அழைத்து காரில் ஏற்றி கடத்தி சென்று தாசபிரகாஷ் எம்.சி.டி.எம். பள்ளி எதிரில் உள்ள தி.மு.க. முன்னாள் பகுதி செயலாளர் சிட்டிபாபுவின் ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். காகரின் என்பவர் இந்த சொத்தை அபகரிக்க போலி பத்திரங்கள், போலிபட்டா மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பணம் கொடுத்துள்ளோம். 3 கோடி ரூபாய் வரை செலவு செய்து விட்டு டிரஸ்ட் கிட்ட சொத்து கொடுத்துட்டு சும்மா போயிடனுமா? வேணும்னா உனக்கு 1 ஷேர் கொடுத்து விடுகிறோம். வேண்டாம்னா இந்த பிரச்சினையை இத்தோடு விட்டுவிடு. இல்லையெனில் உன்னையும் உன் குடும்பத்தில் உள்ளவர்களையும் சாகடித்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.
நான் உயிருக்கு பயந்து மேலும் தகவல்கள் சேகரித்தபொழுது பரிதி இளம்வழுதி பி.எ.காகரின் தலைமையில் பரிதி இளம்வழுதி உதவியுடன் இந்த மாபெரும் டிரஸ்ட் நில அபகரிப்பு மோசடி நடந்து உள்ளது தெரியவந்தது.
1875 முதல் தர்ம தோப்பு அறக்கட்டளை பட்டா நெ.19-ல் நாராயணசாமி ரெட்டி அறங்காவலர் என உள்ளது. 1911 முதல் 28.12.2004 வரை சி.நா.முனுசாமி ரெட்டி என்கிற தனி நபர் பெயரில், டிரஸ்ட் என்கிற வார்த்தை மறைக்கப்பட்டு பட்டா நெ.9 என மோசடியாக உள்ளது. 7 ஏக்கர் 46 சென்ட் நிலம் பட்டா 19-ல் அடங்கிய தர்மதோப்பு அறக்கட்டளைக்கு சொந்தமானது என 2008-ல் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உதவியுடன் அவருடைய பி.ஏ.காகரின் என்பவர் 2001 என்கிற பட்டாவில் 7 ஏக்கர் 46 சென்ட் நிலம் உள்ளது என போலி பட்டா தயாரித்துள்ளார். இந்த பட்டாவை வில்லிவாக்கம் சார்பதிவாளரிடம் காண்பித்து 25.10.2004-ல் ஆவண எண்.3645 ஆப் 2004 ரிலீஸ் ஆவணத்தை 11 பேரின் கூட்டு சதியோடு பத்திரத்தை பதிவு செய்து அதில் சாட்சி கையெழுத்தையும் பரிதி அமைச்சர் பி.ஏ.காகரின் போட்டுள்ளார்.
பதிவு செய்து தோஷி பில்டருக்கு (5கோடியே 34 லட்சத்து 65 ஆயிரத்து 790-க்கு) ரூ.5,34,65,790-க்கு 79 கிரவுண்ட் 500 சதுரஅடி நிலத்தையும், யாஷி மதி தோஷிக்கு ரூ.59,12,250-க்கு 8 கிரவுண்ட் 1832 சதுரஅடி நிலத்தையும் டிரஸ்ட் சொத்தை தனியார் சொத்து என விற்றுள்ளனர். தோஷி பில்டர் ஹர்ஷாத் வி தோஷி போலி பட்டாதாரர் இராமச்சந்திரனிடம் ஒரு பத்திரமும், தன் மனைவி யாஷிமதி தோஷி பெயரில் மற்றொரு பத்திரமும் 47/ஏ-ன் கீழ் அரசுக்கு குறைவு முத்திரைதாள் செலுத்தி டிரஸ்ட் சொத்தை தனியார் சொத்து என பத்திரம் பதிவு செய்துள்ளார். இந்த 2 பத்திரங்களிலும் பரிதி இளம்வழுதி அமைச்சர் பி.ஏ. காரின், தி.மு.க. மாவட்ட பிரதி நிதி சிட்கோ வாசு, தி.மு.க. முன்னாள் பகுதி செயலாளர் சிட்டிபாபு ஆகியோர் சாட்சி கையெழுத்திட்டுள்ளனர்.
200 கோடி மதிப்புள்ள சொத்தை போலி பத்திரம் மூலம் ரூ.5 கோடியே34 லட்சத்து 65 ஆயிரத்து 790-க்கு பரிதி இளம்வழுதி பி.ஏ. காகரினிடம் ஷர்ஷாத் வி.தோஸி வாங்கியுள்ளார். 4.6.2008 தேதியில் ரூ.22 லட்சத்து 37 ஆயிரத்து 935-ஐ காசோலை எண்.150743, செளத் இந்தியன் பேங்க் திருவல்லிக்கேணி பிராஞ்ச், 10.10.2007 தேதியில் ரூ.2,66,010 காசோலை எண்.130380, ரூ.1,50,000 காசோலை எண்.334997 தேதி 2.10.2006 என்பதை தவிர பல செக்குகள் ஆகவும் ரொக்கமாகவும் ரூ.30,98,945-ஐ தோஷிபில்டர் தி.மு.க. அமைச்சர் பி.ஏ. காகரினுக்கு கொடுத்ததாக பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரிதி இளம்வழுதி, பரிதி இளம்வழுதியின் பி.ஏ. காகரின், சிட்கோ வாசு, சிட்டிபாபு, போலி பட்டாதாரர் இராமச்சந்திரன், ஹர்ஷாத் வி தோஷி ஆகியோர் 47/ஏ-ன் கீழ் அரசுக்கு குறைவு முத்திரைத்தாள் வசூலிக்கும் நடவடிக்கையின் கீழ் உள்ள ஆவண எண்.234/2007 மற்றும் ஆவண எண்.235/2009 ஆகிய பத்திரத்தை பெரம்பூர்-புரசை தாலுகாவில் கொடுத்து இரண்டே மாதங்களில் எத்திராஜ் தாசில்தார், நாகராஜ் துணை தாசில்தாரிடம் போலி பட்டா பெற்றுள்ளனர்.
கடந்த 10.7.2010-ல் கத்தி, கம்பு, கடப்பாறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் டிரஸ்டின் 7 1/2, ஏக்கரில் 4 ஏக்கர் 84 சென்ட் நிலத்தை சாரதி தலைமையில் ரவுடிகளோடு ஆக்கிரமிப்பு செய்து டிரஸ்டிகளையும், பொதுமக்களையும் விரட்டி அடித்து காம்பவுண்ட் சுவர் எழுப்பினார்கள். காகரின், சிட்டிபாபு ஆகியோர் தர்மதோப்பு அலுவலகத்திற்கு வந்து இந்த சொத்து தோஷி பில்டர் பினாமி உதயநிதி ஸ்டாலினுக்கு செல்கிறது. நிலத்தை அளக்கும் போதும், காம்பவுண்ட் கட்டும்போதும் புகார் செய்யக்கூடாது என்றம், செய்தால் அவ்வளவு தான் என மிரட்டினார்கள். தினமும் டிரஸ்டிகளின் வீடுகளின் மேல் ரவுடிகள் கல் எறிந்தார்கள். இதனால் உயிருக்கு பயந்து கொண்டு புகார் செய்யவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநதியின் குடும்பத்திற்கு இந்த சொத்து வாங்கப்பட்டுள்ளதா? என்பதை தீர விசாரிக்கவும்.
27.12.2010 தாசில்தார்கள் மீது நடவடிக்கை கோரி மனு கொடுத்து இருந்தேன். புகாரினை பதிவு செய்யாததால் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து அதற்கானபுகாரினை போலீசார் பதிவு செய்யகோரி உத்தரவும் பெற்றேன். உத்தரவு பெற்றும் தி.மு.க. ஆட்சியில் என்னுடைய வழக்கை ஆய்வாளர் சுகன்யா, துணை ஆய்வாளர் சபாபதி ஆகியோர் சரியான புலன் விசாரணை செய்யவில்லை. சரியான விசாரணை செய்திருந்தால் நான் கடத்தலுக்கும், கொலை மிரட்டலுக்கும் ஆளாகி இருக்கமாட்டேன்.
நில மோசடி தொடர்பாக அமைச்சர் பரிதி பி.ஏ. மீது கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் தெரிவித்து அனைத்து டி.வி.ளிலும் ஒளிபரப்பு ஆனது. மறுநாளே பரிதி இளம் வழுதி தன்னுடைய பி.ஏ. காகரினோடு முன்னாள் முதலமைச்ர் கருணாநிதியை சந்திப்பு நடக்கும்படியான ஒரு போட்டோ செய்தி அனைத்து டி.வியிலும், பத்திரிகைகளிலும் வந்துள்ளது. இதன் அடிப்படையில் அறக்கட்டளை சொத்தை அபகரிக்க முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி உடந்தையாக இருந்துள்ளார் என வெட்டவெளிச்சம் ஆகிய உள்ளது. இதன் மூலம் போலீஸ் அதிகாரிகளை நடவடிக்கை எடுக்காதவண்ணம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, அமைச்சரின் பி.ஏ.காகரின் ஆகியோர் மிரட்டியும், என்னையும் மிரட்டி உள்ளனர். அமைச்சர் மற்றும் குற்றவாளிகள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்காத வண்ணம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரவளித்து உதவி செய்துள்ளார் என்பதும் தெரிய வருகிறது. நீதி துறையையும், பத்திரபதிவு துறையையும், வருவாய்துறையையும் ஏமாற்றி போலி பட்டா, போலி பத்திரம், ஆள்மாறாட்டம், லஞ்சம், கொலை மிரட்டல், கடத்தல், முத்திரை தாள் மோசடி என செய்து பொது நல டிரஸ்ட் சொத்தை அபகரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, அவரது உதவியாளர் காகரின் இதற்கு உடந்தையாக செயல்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, பக்கபலமாக செயல்பட்ட பினாமி உதயநிதி ஸ்டாலின், போலிபட்டா தயாரிக்க உதவிய அரசு அதிகாரிகள் புவனேஸ்வரன் தாசில்தார், எத்திராஜ், துணை தாசில்தார் நாகராஜ் ஆகியோர் மீதும் மற்றும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீதும் காவல்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், மேலும் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அபகரிகப்பட்ட டிரஸ்ட் நிலத்தை மீட்டு தரவேண்டும் என்றும், அரசு மற்றும் தர்மதோப்பு அறக்கட்டளை சார்பாக பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் 15 அடுக்குமாடி மருத்துவமனை கட்டி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும், உயிருக்கும், உடமைக்கும், டிரஸ்டிகளுக்கும், டிரஸ்டுக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தனது புகாரில் ரங்காரெட்டி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந