எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.5 - சென்னை மாநர காவல்துறை 4 மண்டலங்களாக நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்படும் என்றும், காவல்துறை நவீனப்படுத்த ரூ.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதுகுறித்து தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்திருப்பதாவது:
குற்றவாளிகள், சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அமைதியை நிலைநாட்ட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. பொதுமக்களிடையே நம்பிக்கையும், நல்லெண்ணமும் உருவாகும் வகையில் காவல் துறை தனது கடமையினை எந்த தலையீடுமின்றி சுதந்திரமாகவும் திறம்படவும் செயலாற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவித்தவாறு கடந்த ஆட்சிக்காலத்தில் நில அபகரிப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறை தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நில அபகரிப்பு குறித்த புகார்களை விசாரிக்க மாவட்டங்களில் சிறப்பு பிரிவுகள் காவல் துறையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே திங்கள் முதல் 2,491 புகார்கள் பெறப்பட்டள்ளன. நில அபகரிப்பில் ஈடுபடுவர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து அந்நிலங்களை உரியவரிடம் திரும்ப ஒப்படைக்கும் பணியினை இந்த அரசு மேற்கொள்ளும். எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் இஒளந்த சொத்துக்களை திரும்ப பெற இயலும் என்று திடமாக நம்பலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல் துறையை நவீனப்படுத்த 2011-2012 ஆம் ஆண்டு திருத்த வரவு- செலவுத்திட்ட மதிப்பீட்டில் 54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையை மேலும் நவீனப்படுத்துவதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசு இந்த அரசு வலியுறுத்தும். பதிமூன்றாவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி காவலர் பயிற்சிக்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 25 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்.
தற்போது, தமிழ்நாட்டில் 1,492 காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றுள் 282 காவல் நிலையங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. அவற்றில் 92 இடங்களில் புதிய காவல் நிலையக் கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 2011-2012 ஆம் ஆண்டில் 11 கட்டடங்களை கட்டுவதற்கென 4.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் உரிய இடம் தேர்வு செய்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.
சைபர் குற்றங்களை திறம்படத் தடுக்க சேலத்திலும், திருநெல்வேலியிலும் சைபர் குற்றப்பிரிவுகள் தொடங்கப்படும். சைபர் தடயவியல் சோதனைக் கூடங்கள், சென்னை மாநகர காவல், குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளன. இதற்கு சோதனைக்கூடங்கள் சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பிற ஆறு மாநகரங்களிலும் ஏற்படுத்தப்படும்.
தற்போது காலியாக உள்ள 896 சார் ஆய்வாளர்கள், 121 தொழில்நுட்ப சார் ஆய்வாளர்கள், 5,588 இரண்டாம் நிலை காவல்களுக்கான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றப்புலனாய்வு ஆகியவற்றுக்கு கூடுதலாக தேவைப்படும் காவலர்கள் எண்ணிக்கை உரிய முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு அப்பணியிடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் காவல் துறைக்கு உறுதுணையாக ஊர்காவல் படையினர் செயல்பட்டு வருகின்றனர். தற்போது, 11,622 ஆக இருந்து வரும் இப்படையினரின் எண்ணிக்கை 16,000 ஆக உயர்த்தப்படும். இப்படையினரின் தினப்படி 65 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்தப்படும்.
சென்னையை ஒட்டிப் பெருகி வரும் நகர்ப்புற வளர்ச்சியால் காவல் கண்காணிப்பு முறையிலுள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், சென்னை மாநகர காவல் துறையும், செங்கல்பட்டு கிழக்கு காவல் மாவட்டமும் ஒன்றிணைக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டது. வேகமாக பெருகிவரும் சென்னை புறநகர் பகுதிகளை சென்னை மாநகர காவல் ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் கொண்டுவர வேண்டும் என்ற நோக்குடன் இந்த மாற்றம்ம செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு மறுசீரமைப்பின் மூலம் சென்னை புறநகர் காவல் ஆணையரகம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது. இதனால் காவல் கண்காணிப்பு முறையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2005-ம் ஆண்டு ஒரே உருவாகத்தின்கீழ் உருவாக்கப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆணையரகமே குற்றத்தடுப்பிற்கு ஏதுவாகவும், சிறப்பாக செயல்பட உகந்ததாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, இந்த அரசு சென்னை புறநகர் காவல் ஆணையரகத்தை சென்னை மாநகரக்காவல் ஆணையரகத்துடன் ஒருங்கிணைத்து சென்னை பெருநகர காவல் ஆணையரகமாக உருவாக்கும். நிருவாக வசதிக்காக இந்த ஆணையரகம் வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய மண்டலம் என நான்கு மண்டலங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
இவ்வாறு பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தீயணைப்பு துறைக்காக, இந்த நிதியாண்டில், மேம்படுத்தப்பட்ட தீயணைப்பு வாகனங்கள், உயர் அழுத்தக் குழாய்கள், இணைப்பு கருவிகள் போன்வற்றை வாங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். தீயணைப்பு, மீட்புப் பணி நிலையங்களுக்கான 10 புதிய கட்டடங்களும், பெரம்பலூர் கோட்ட அலுவலகத்திற்காக ஒரு புதிய கட்டடமும், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் 243 வீடுகள் கட்டும் பணி 21.50 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. தீயணைப்பு - மீட்பு பணிகள் துறைக்காக இந்த திருத்த வரவு, செலவுத் திட்ட மதிப்பீட்டில் 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.