எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஆக.5 - தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. முதல் நாளான நேற்று சபையில் 2011-12-ம் ஆண்டுக்கான முழு அளவிலான திருத்தப்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. தமிழக முதல்வராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 3-வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த ஜூன் 3-ம் தேதி தமிழக சட்டசபை முதல் முறையாக கூடியது. அப்போது கவர்னர் பர்னாலா மரபுப்படி சபையில் உரை நிகழ்த்தினார். அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் அவர் தனது உரையின் மூலம் அறிவித்தார். ஒருவாரம் நடைபெற்ற இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நேற்று சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமானது. காலை 10-30 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதாவும் மாநில நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டசபைக்கு வந்தனர். அதற்கு முன்பாக காலை 10-10 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதாவிடம் பட்ஜெட் அறிக்கையை கொடுத்து அவரிடம் வாழ்த்து பெற்றார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதன் பிறகு இருவரும் சபைக்கு வந்தனர். காலை 10-40 மணி அளவில் சபாநாயகர் ஜெயகுமார் சபைக்கு வந்தார். பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கின. திருக்குறளை படித்து சபை நடவடிக்கையை தொடங்கிவைத்த சபாநாயகர் பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் என்று அறிவித்தார். அதன் பிறகு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். காலை 10-40 மணிக்கு தொடங்கிய அவரது உரை மதியம் 1.40 மணி வரை அதாவது கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்தது. அ.தி.மு.க. அரசின் கொள்கைகள் மற்றும் புதிய திட்டங்களை அவர் வாசித்தபோது இடையிடையே உறுப்பினர்கள் மேஜையை தட்டி கரொலி எழுப்பினார்கள். பட்ஜெட் உரையை முடித்த பிறகு முதல்வருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு தன் இருக்கையில் பன்னீர்செல்வம் அமர்ந்தார். முதல்வரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் போடப்படவில்லை. வரியில்லா பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு:-
2011-12-ம் ஆண்டில் 115 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் மின்வெட்டு முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசு கேபிள் டி.வி. விரைவில் மாநிலம் முழுவதும் தனது ஒளிபரப்பை தொடங்கும். திருக்கோயில் அன்னதானத்திட்டம் ஏற்கனவே அமுலில் இருந்து வருகிறது. இந்த திட்டம் மேலும் 106 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். பூசாரிகள், ஓதூவார்கள்,இசைவாணர்கள் ஆகியோர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்படும். முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதியில் தேசிய சட்டப்பள்ளி புதியதாக தொடங்கப்படும். ஏற்கனவே இத்தொகுதிக்கு ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டு பல திட்டங்களுக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது. மாற்று திறனாளிகளுக்கு அரசு பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தாமல் இருக்க அவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன்படி 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு ரூ. ஆயிரத்து 500-ம் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரமும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். மாணவிகளுக்கு பாவாடை,தாவணிக்கு பதிலாக சல்வார் கமீஸ் ஆடையும் மாணவர்களுக்கு அரைக்கால் டவுசருக்கு பதிலாக முழுக்கால் பேண்ட்டும் வழங்கப்படும் என்றும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி துவங்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு இந்தாண்டு இரண்டு செட் சீருடையும் அடுத்தாண்டு 4 செட் சீருடையும் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் பேருக்கு கறவை மாடுகள் வழங்கப்படும். தமிழகத்தில் புதிய 10 அரசு தொழிற்பயிற்சி மையங்கள்( ஐ.டி.ஐ) அமைக்கப்படும். நில அபகரிப்பு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் வலுப்படுத்தப்படும். திட்டமிட்டபடி அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. துவரம் பருப்பு, உளுந்து, கோதுமைக்கு வழங்கப்படும் சலுகை விலைத்திட்டம் நீட்டிக்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். கூடுதல் மின் உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடலோர மாவட்டங்களில் மீன்பதப்படுத்தப்படும் மையங்கள் அமைக்கப்படும். காவல்துறையை நவீனப்படுத்த ரூ. 54 கோடி ஒதுக்கப்படும். ஒரு லட்சத்திற்கும் குறைவாக மக்கள் தொகை உள்ள 75 சிறிய நகரங்களில் புதிய நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். மக்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவமனை திட்டம் அமுல்படுத்தப்படும். ஆதிதிராவிட விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.200 மாத உணவுப்படியாக உயர்த்தி தரப்படும். இதேபோல் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கும் உயர்த்தி தரப்படும். விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரேசன் அரிசி கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள், சமூக விரோதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறாக பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக சபை தொடங்கியதுமே தி.மு.க.வினர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். தங்களை ஒரே வரிசையில் அமரவைக்க வேண்டும். சமச்சீர் கல்வி விவகாரம் போன்றவற்றை காரணம் காட்டி தி.மு.க. வினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
3 மணிநேரம் பட்ஜெட் படித்த ஓ.பி.எஸ்.
அ.தி.மு.க. அரசு ஜெயலலிதா தலைமையில் பொறுப்பேற்ற பிறகு 2011-12-க்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 10.40 மணிக்கு தாக்கல் செய்தார்.
10.40 மணிமுதல் 1.40 மணிவரை கொஞ்சமும் அசராமல் தொடர்ந்து 3 மணிநேரம் பட்ஜெட்டை படித்தார்.
பட்ஜெட் உரையை படித்து முடித்தவுடன் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார். மேலும் அனைத்து அமைச்சர்களும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கைகொடுத்து வாழ்த்தும், பாராட்டையும் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.