எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.5 - 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நேற்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: அரசு கால்நடை வளர்ப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும். இக்குறிக்கோளை எட்ட, பால் உற்பத்தியில் இரண்டாவது வெண்மை புரட்சியை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கும், 60 ஆயிரம் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும். 2011-2012 ஆம் ஆண்டில் பால் உற்பத்தி குறைவாக உள்ள பின்தங்கிய கிராமப்புறங்களில் வாழும் ஏழைக்குடும்பங்களுக்கு ஜெர்சி போன்ற 12,000 கலப்பின கறவை மாடுகள் வழங்கப்படும். இந்த திருத்த வரவு, செலவுத்திட்ட மதிப்பீட்டில், இதற்காக 56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கறவை மாடுகள் வழங்கப்படும் இக்கிராமங்களில் பிற அடிப்படைக் கட்டமைப்புகளான பால் கூட்டுறவு சங்கங்கள், பால் சேகரிப்புத் தடங்கள் ஏற்படுத்தப்படும். இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனடைந்த குடும்பங்களைச்சேர்ந்த மகளிரை கொண்டு 4,000 பால் உற்பத்தி குழுக்கள் உருவாக்கப்படும்.
மாநிலத்தின் ஒரு நாள் மொத்த பால் உற்பத்தியான 158 இலட்சம் லிட்டரில் ஆவின் நிறுவனம் மூலம் 20 இலட்சம் லிட்டர் பால் மட்டுமே கையாளப்படுகிறது. ஆவின் நிறுவனம், பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளை பால்வளம் குறைவாக உள்ள பகுதிகளில் பலப்படுத்துவதன் மூலம் பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்பது இந்த அரசின் நோக்கமாகும்.
கால்நடை மருத்துவ சேவையை மேம்படுத்தி பயனாளிகள் இருக்கும் இடத்திற்கே கொண்டு செல்ல கூடுதலாக 155 நடமாடும் கால்நடை மருத்துவ மையங்கள் ஆவின் நிறுவனத்தால் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ மையம் செயல்படுவது உறுதி செய்யப்படும். ஆவின் நிறுவனம், மேலும 100 கூடுதல் பால் கொள்முதல் மையங்களை 32.50 கோடி ரூபாய் செலவில் நிறுவும். 5 ஆயிரம் லிட்டருக்கு கூடுதலாக கொள்ளளவு திறன் கொண்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் குளிரூட்டும் வசதி, மதிப்பு கூட்டு வசதிகளுடன் நவீனப்படுத்தப்படும். 2011-2012 ஆண்டில், ஆவின் நிறுவனம் மூலம், மேலும் 10 பால் பண்ணைகள் இந்த முறையில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கால்நடை மருத்துவ சேவையை மேம்படுத்த 2011-2012 ஆம் ஆண்டில் 385 கால்நடை துணை மையங்கள், கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். விரிவாக்க வசதிகளை வலுப்படுத்துவதற்காக 2011-2012 ஆம் ஆண்டில், நபார்டு வங்கியின் ஊரக கட்டமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து 122.24 கோடி ரூபாய் செலவிடப்படும். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிலும் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி நடப்பாண்டில் தொடங்கப்படும். மேலும், உலகத்தரம் வாய்ந்த கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை மையம் ஒன்று ஓசூரில் ஏற்படுத்தப்படும்.
முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் இந்த அரசு வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, குறிப்பாக விவசாய கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நான்கு வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகளை இலவசமாக வழங்கும். 2011-2012 ஆம் ஆண்டு, ஒரு இலட்சம் குடும்பங்கள் தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகளை இத்திட்டத்தின் கீழ் பெற்று பயனடைவர். இந்த திருத்த வரவு, செலவுத் திட்ட மதிப்பீட்டில், 135 கோடி ரூபாய் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 1.5 இலட்சம் குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளின் முடிவில் ஏழு இலட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தின்கீழ் பயனடைவார்கள். இது ஊரக பகுதிகளிலுள்ள குடும்பங்களில் சுமார் 10 விழுக்காடாகும். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் அன்று ஏழை குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துடன் இந்த திட்டமும் தொடங்கிவைக்கப்படும்.
இந்த அரசு, தீவன உற்பத்தியை மேம்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்றை தொடங்கும். நடப்பு ஆண்டில் 24 ஆயிரம் ஏக்கரில் குறிப்பிட்ட பசுந்தீவன வளர்ப்பிற்கு மானியம் வழங்கப்படும். நுண்ணீர் பாசனத் திட்டம், தீவனப் வளர்ப்பிற்கும் விரிவுப்படுத்தப்படும். நுண்ணீர், பாசன தெளிப்பான்கள், வேகத்தெளிப்பான்கள் போன்றவற்றை பயன்படுத்த சிறு குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்படும். அவற்றோடு, தீவன சேதாரத்தை குறைக்க, 50 விழுக்காடு மானியத்தில் 5 ஆயிரம் புல்வெட்டிகளு, 5 ஆயிரம் நறுக்கும் இயந்திரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்தகைய பசுந்தீவன உற்பத்தித் திட்ட மானியத்திற்கென, அரசு, 20 கோடி ரூபாயை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.