எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஆக்.5 - தமிழக விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்க ரூ.3000 கோடியும், உரமானியதிற்கு ரூ.89 கோடியும் நிதி ஒதுக்கி தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. நேற்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.அதில் விவசாயிகளுக்கு சில சலுகைகளை அறிவித்தார்.
இது குறித்த விபரம் வருமாறு
பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில், முதன்மைத் துறையின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 20072008, 20082009 ஆகிய ஆண்டுகளில் இத்துறையின் வளர்ச்சி எதிர்மறையாகி, 20092010, 20102011 ஆகிய ஆண்டுகளில் வளர்ச்சி சதவீதம் சிறிதளவு உயர்ந்த போதிலும், திட்டக் காலத்தின் முதல் நான்கு ஆண்டுகளில் இத்துறையின் மொத்த வளர்ச்சி ஒட்டுமொத்தமாக 0.51 விழுக்காடு எதிர்மறையாகவே இருந்துள்ளது. நகரமயமாக்கலின் விளைவாக விவசாய சாகுபடி நிலங்கள் குறைந்து வருகின்றன. பயிரிடு திறன், பாசனத் திறன் போன்றவற்றில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை. மோசமான இச்சூழ்நிலையை மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இவ்வரசு மேற்கொள்ளும்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான இந்த அரசால், காவிரி வடிநிலப் பகுதி விவசாயிகள், சாகுபடியை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்காக உரிய நாளிற்கு முன்னதாகவே மேட்டூர் அணையிலிருந்து பாசனnull நீர் திறந்துவிடப்பட்டது. மாநிலத்தில் உள்ள பிற முக்கிய அணைகளிலும் போதிய nullநீர் இருப்பு இருந்த காரணத்தினால், பாசனத்திற்கான நீnullர் திறந்துவிடப்பட்டது. கடந்த ஆண்டு 85.35 இலட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி அடைந்துள்ள நிலையில் 2011-2012 ஆம் ஆண்டில் 115 லட்சம் மெட்ரிக் டன் என்ற உயர் இலக்கினை இந்த அரசு நிர்ணயித்துள்ளது. உரிய காலத்தில் அணைகளிலிருந்து பாசனnullநீர் திறந்துவிடப்பட்டதாலும், வழக்கமான மழையளவு கணிக்கப்பட்டுள்ளதாலும் இந்த உயர் இலக்கினை அடைய முடியும் என நம்புகிறேன்.
முதன்மைத் துறையினைப் புத்துயிரூட்ட எடுக்கப்படவுள்ள உத்திகளைப் பற்றி நான் இப்போது குறிப்பிட விரும்புகிறேன். வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்தையும், உற்பத்தித் திறனையும் அதிகரிக்க இந்த அரசு உரிய கவனம் செலுத்தும். தற்போது வேளாண்மைத் துறையில் உற்பத்தியிலும் உற்பத்தி திறனிலும், ஒரு தேக்கநிலை நிலவுகிறது. உற்பத்தித் திறனில் உள்ள இடைவெளியை சீர் செய்தும், மதிப்புக் கூட்டியும், வேளாண்மை உற்பத்தியை அதிகரித்து இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திட உறுதி கொண்டுள்ளோம். மேலும், விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை வரும் ஐந்தாண்டுகளில் இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்த்தும் உயரிய குறிக்கோளை நிர்ணயித்து அதற்கேற்ப செயல்பட உள்ளோம். நவீன தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்து, விவசாயிகளிடம் கொண்டு செல்வதன் மூலம் பயிர்களின் உற்பத்தித் திறனை உயர்த்தியும், பண்ணை அளவில் கலப்புப் பண்ணையம் போன்ற உத்திகளை மேற்கொண்டும், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தும் செயல்படுத்துவதன் வாயிலாக ஒருங்கிணைந்த பண்ணை வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
5.சிறந்த தொழில்நுட்ப உத்திகளை ஒருங்கிணைந்த முறையில் கடைப்பிடிக்க, நடைமுறையில் உள்ள தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், விரைவுபடுத்தப்பட்ட பயறு வகை உற்பத்தித் திட்டம், nullர்வள நிலவளத் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர் பாசனத்திற்கான தேசிய இயக்கம் ஆகியவை பண்ணை அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 20102011 ஆம் ஆண்டு, 197 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு இந்நிதியாண்டில் 467 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே 20102011 ஆம் ஆண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 91.18 கோடி ரூபாய், 20112012 ஆம் ஆண்டில் 145 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற முக்கிய பயிர்களின் உற்பத்தித் திறனைப் பெருக்கவும், காய்கறிகள், nullக்கள், பழங்கள் போன்ற அதிக வருவாய் ஈட்டுகின்ற தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடும் பரப்பை விரிவுபடுத்தவும் இந்த அரசு கவனம் செலுத்தும். முன்னோடி தொழில்நுட்பங்களான திருந்திய நெல் சாகுபடித் திட்டம், நவீன முறையில் கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தும் திட்டம், துல்லிய பண்ணையம், பி.டி. பருத்தியைப் பரவலாக்குதல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் உகந்த பயிர் மேலாண்மையைக் கடைப்பிடித்தல், பசுமைக் குடில், துல்லிய பண்ணையம் முறைகளில் காய்கறிகளைப் பயிரிடுதல், தோட்டக்கலைப் பயிர்களுக்கான அடர் நடவு முறை போன்றவை தீவிரமாக பரவலாக்கப்படும். நெல் உற்பத்தித் திறனை உயர்த்த 2011-2012 ஆம் ஆண்டில் 22.24 இலட்சம் ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இதே போன்று 14,000 ஏக்கரில் நவீன முறையில் கரும்பு உற்பத்தித் திறன் உயர்த்தும் திட்டம் மேற்கொள்ளப்படும். கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்துவதற்காக, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 2.45 இலட்சம் ஏக்கரில் இத்திட்டத்தை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயறு வகைகளை இறவையில் அதிகப் பரப்பில் தனிப் பயிராக சிறந்த பயிர் மேலாண்மையுடன் சாகுபடி மேற்கொள்வதன் மூலம், அதன் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும். பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தித் திறனை உயர்த்திடும் வகையில் 20.93 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 22,000 ஏக்கர் பரப்பில் துல்லிய பண்ணையமும், நான்கு இலட்சம் சதுர மீட்டர் பரப்பில் பசுமைக் குடில் முறையும் மேற்கொள்ளப்படும்.
தரமான விதை, உரம், குறைந்த வட்டியிலான கடன் போன்றவை உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கப் பெறுவது அவசியமாகும். விரிவான விதைத் திட்டம் ஒன்றை இந்த அரசு தயாரித்து விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும். 2011-2012 ஆம் ஆண்டில் விதை மானியத்திற்காக மட்டும் 85.92 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கியுள்ளது. இதே போன்று போதுமான உரங்கள் கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலமாக வழங்கப்படும். உரம், nullச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மதிப்புக் கூட்டு வரியிலிருந்து இவ்வரசு விலக்களித்துள்ளதால் இப்பொருட்கள் விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும். மேலும், விவசாயிகளுக்கு தடையில்லாமல் உரம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு வழங்கப்படும் வட்டியில்லா முன்பணத்தின் தற்போதைய அளவு 90 கோடி ரூபாயிலிருந்து 150 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கான கடன் வழங்குதல் மற்றும் இதர சேவைகளை மேம்படுத்திட கூட்டுறவுச் சங்கங்கள் வலுப்படுத்தப்படும். கூட்டுறவுத் துறை வாயிலாக, 2011-2012 ஆம் ஆண்டில், உரிய காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்துவோருக்கு வட்டியில்லாப் பயிர்க்கடனாக 3,000 கோடி ரூபாயினை வழங்கும் உயர் இலக்கினை இவ்வரசு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.