முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலியாவில் பஞ்சம்: 29,000 குழந்தைகள் பலி

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

நைரோபி,ஆக.6 - ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிலவும் கடும் பஞ்சத்திற்கு கடந்த 90 நாட்களில் மட்டும் 29 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர். இவர்கள் அனைவருமே 5 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

சோமாலியாவில் பஞ்சம் பாதித்த பகுதியாக புதிய 3 பகுதிகளை ஐ.நா. அறிவித்துள்ளது. அங்கு வசிக்கும் 7.5 லட்சம் மக்களில் பெரும்பாலானோரின் உயிரை காக்க உடனடியாக உதவ வேண்டிய சூழல் உள்ளது என்றும் ஐ.நா. கூறியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் பஞ்சத்தின் பிடியில் சிக்கி 29 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் சேவைத் துறை அதிகாரி நான்ஸி லின்பர்க், அந்நாட்டின் நாடாளுமன்ற குழுவுக்கு அளித்த அறிக்கையில் இதை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்