முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் அருகே 5 ஏக்கர் நிலம் அபகரிப்பு - 3 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஆக.6​ - சேலம் அருகே 5 ஏக்கர் நிலம் அபகரிப்பு செய்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.முன்னாள் பா.ம.க.எம்.எல்.ஏ.வும்,மாநில துணை தலைவருமான மு.கார்த்தியை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கரிவளவன். இவரது மகன் வரதராஜன்(46). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்தன்(72),பொன்னுவேல்(68), அண்ணாமலை(65). இவர்கள் 3 பேரும் சகோதரர்கள் இதில் சித்தன் இறந்துவிட்டார். கரிவளவனுக்கு சொந்தமாக அப்பகுதியில் 5.1 ஏக்கர் நிலம் இருந்தது. இதே போல் பொன்னுவேல் சகோதரர்களுக்கு சொந்தமான 1.65 ஏக்கர் நிலம் கரிவளவன் நிலத்திற்கு அருகில் இருந்தது.

இவர்கள் இருவரும் உறவினர்கள் நிலம் தொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் பிரச்சனை இருந்தது. இதில் கடந்த 1980 ஆம் ஆண்டு பொன்னுவேல் சகோதரர்கள்,கரிவளவனை வெட்டி கொலை செய்துவிட்டனர். இது தொடர்பான வழக்கில் பொன்னுவேல் சகோதரர்கள் விடுதலையும் பெற்றுவிட்டனர்.

இந்த நிலையில் பொன்னுவேல் சகோதரர்கள் கரிவளவனுக்கு சொந்தமான 5.1 ஏக்கர் நிலத்திற்கு போலி பட்டா தயார் செய்து அந்த நிலத்தை சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க.செயற்குழு உறுப்பினராக உள்ள மோகன் என்பவருக்கு தங்களுடைய 1.65 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து மொத்தம் 6.66 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துவிடுகிறார். இந்த நிலத்தை மோகன் கடந்த 2007 ஆம் ஆண்டு பா.ம.க.மாநில துணை தலைவரும், முன்னாள் சேலம் 2 வது தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வுமான மு.கார்த்திக்கு விற்பனை செய்தார்.

இந்த நிலையில் கரிவளவனின் மகன் வரதராஜன்.தங்கள் நிலத்தை மோசடி செய்து போலி பட்டா தயாரித்து அபகரித்து விற்பனை செய்த பொன்னுவேல்,அண்ணாமலை, மோகன் மற்றும் கார்த்தி மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தருமாறு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனிடம் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் மாவட்ட நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவிற்கு பரிந்துரை செய்தார். டி.எஸ்.பி.ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் போலி பட்டா தயார் செய்து கரிவளவனின் நிலம் அபகரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னுவேல், அண்ணாமலை,மோகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக பா.ம.க.முன்னாள் எம்.எல்.ஏ.மு.கார்த்தியை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே பா.ம.க.முன்னாள் எம்.எல்.ஏ.ஒருவர் நில அபகரிப்பில் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிட தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago