முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் பலி: முதல்வர் இரங்கல்

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.7 - விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் உள்ள காளையார்குறிச்சி கிராமத்தில்  அமைந்துள்ள பட்டாசுஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தாருக்கு  தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தோடு , அவர்களது குடும்பதாருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும்  வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காளையார்குறிச்சி கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் 5.8.11 அன்று ஏற்பட்ட வெடிவிபத்து 5 பேர் சம்பவ இடத்திலேயும், மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன். இந்த விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த வெடிவிபத்து சம்பவத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவருக்கும் நல்லமுறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், விருதுநகர் மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் காயமடைந்துள்ள அனைவரும் விரைவில் பூரணகுணமடைய வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடந்தவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்