முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிர் காப்பீட்டு பதிவில் முறைகேடு: கூட்டுறவு அதிகாரி சஸ்பண்ட்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

ராமநாதபுரம் ஆக 7 - கடந்த திமுக ஆட்சியில் பயிர்காப்பீட்டுக்கு பதிவு செய்ததில் முறைகேடு செய்ததாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் மற்றும் கிராமநிர்வாக அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் அருண்ராய் உத்தரவிட்டுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் ஏ.புனவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவ சங்கத்தில் 2009-2010ம் ஆண்டில் பயிர்காப்பீடு தொகை பெறுவதற்காக பதிவு செய்துள்ள விவசாயிகளிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்ததை தொடர்ந்து ஏ.புனவாசல் கிராமநிர்வாக அலுவலர் மற்றும் ஏ.புனவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அவர்கள் இருவர் மீதும் ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புதுறை நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.; ; மேலும்  உண்மையான விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைப்பதற்கு ஏதுவாக வருவாய்துறை வேளாண்மைதுறை மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு;ள்ளது. பாதிக்கப்பட்டுள்ளதாக கருதும் விவசாயிகள் இந்த குழு முன்பாக ஆஜராகி தங்கள் தரப்பு ஆவணங்களை காட்டி உரிய நிவாரணம் பெறலாம் என்றும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்