முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானை தாக்கி இறந்த பாபு குடும்பத்துக்கு நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை, 8 - நீலகிரி மாவட்டம் சேரங்கோடு கிராமத்தை சேர்ந்த பாபு என்பவர் கடந்த 5ம் தேதி யானை தாக்கி இறந்தார். பாபுவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.2.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு கிராமம், சிங்கோணா என்ற இடத்தில் அப்துல் மஜீத்தின் மகன் பாபு, காட்டு யானை தாக்கியதால், கடந்த 5.8.2011 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.

பாபுவை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாயும்,  ஆக மொத்தம் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago