எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.8- உலகிலேயே நீண்ட கடற்கரையான இந்திய கடலோரத்தில் 29 கோடி பேர் வசிப்பதால், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடலோர நிர்வாகத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என ஜெயந்தி நடராஜன் கூறினார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர் தினவிழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் 4 நாள் கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர் தின விழா தரமணியில் நேற்று நடந்தது. இதையொட்டி 4 நாள் கருத்தரங்கை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி ஜெயந்தி நடராஜன் தொடங்கி வைத்தார். விழாவில் மீனவர்களுக்கு உதவும் வகையில் இலவச செல்போன்களையும் வழங்கினார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழக கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்களுக்கு இவை வழங்கப்படுகிறது. இந்த செல்போன் மூலம் மீனவர்கள் தங்களுடைய சந்தேகங்களை 9282442311, 9282442312 ஆகிய ஹெல்ப் லைன் எண்களுக்கு தொடர்பு கொண்டு பருவநிலை மாற்றம், காலநிலை முன் எச்சரிக்கை, கடல் சீற்றம், கடல் வளம், மீன்கள் கிடைக்கும் இடங்கள் உள்பட மீன் வளத்துறை பற்றிய விளக்கங்கள் பெற முடியும். இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்துடன் இணைந்து எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. மீனவர்களுக்கு இந்த செல்போன் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று ஜெயந்தி நடராஜன் கூறினார்.
விழாவில் அவர் பேசியதாவது: பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் இந்நாளில் இங்கு இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. உங்களுடன் சேர்ந்து நானும் அவரை வாழ்த்துகிறேன். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் 21ம் ஆண்டு அறிக்கையை வெளியிடுவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டில் உள்ள முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையும் ஒன்று. விவசாயம் மற்றும் கிராம வளர்ச்சியில் இந்நிறுவனம் பல்வேறு ஆய்வுகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்கும் இருந்து வருகிறது. விவசாய துறை மற்றும் கிராம வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் இந்தியா சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு, சாத்தியமான தீர்வுகளை இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது. இதற்காக இந்த அறக்கட்டளையின் விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் பாராட்டுகிறேன். இந்த ஆண்டு வன ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவில் காடுகள் வளர்ப்புக்குத்தான் அதிகளவில் நிலம் பயன்படுத்தப்படுகிறது. இந்திய புள்ளியல் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19.27 சதவீதம் நிலப்பரப்பில் காடுகள் உள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் காடுகளின் பங்கு மகத்தானது. இந்தியா 600 பாதுகாக்கப்பட்ட பகுதிகளை கொண்டுள்ளது. இதில் 95 தேசிய nullங்காக்களும், 500 வன விலங்கு சரணாலயங்களும் அடங்கும். நமது நாடு nullநீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. கடலோர மண்டலங்களை நிர்வகிப்பது மிகவும் சிக்கலான பிரச்சினை ஆகும். நமது கடலோர சூழல் தன்மையானது வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து காக்கிறது. இந்தியாவின் கடலோர பகுதியின் மொத்த நீnullளம் 7 ஆயிரத்து 500 கி.மீ. ஆகும். சுமார் 29 கோடி பேர் கடலோரத்தில் வசிக்கின்றனர். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 26 சதவீதம் ஆகும். இந்தியாவில் 1.6 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பிரத்யேக பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது. நமது கடலோரப் பகுதியில் 6 ஆயிரத்து 700 சதுர கி.மீ. பரப்பளவுக்கு மாங்குரோவ் காடுகள் உள்ளன. மாங்குரோவ் காடுகளையும், பவள பாறைகளையும் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் கூடுதல் முயற்சிகளை எடுத்துள்ளது. கடலோர பகுதிகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கடந்த 30 ஆண்டுகளில் 12 சதவீதம் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. கடலோர நிர்வாகத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீன் பிடி துறை 60 லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய வருவாயில் மீன்பிடி தொழில் மூலம் 1.2 சதவீதம் வருவாய் கிடைக்கிறது. ஏழைகள் பலருக்கு மீன்தான் புரோட்டீனை அளிக்ககூடிய சத்து உணவாக இருந்து வருகிறது. உலக வங்கி உதவியுடன், ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தை சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடங்கியுள்ளது. கடலோர பாதுகாப்பு மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசிய மையம் ஏற்படுத்தப்படும். இது எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை உள்பட 7 மாநில அளவிலான ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு ஜெயந்தி நடராஜன் பேசினார்.
இந்த விழாவில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன், செயல் இயக்குனர் அஜய்பரிதா, இங்காய்ஸ் இயக்குனர் ஷெனாய், குவல்காம் மூத்த மேலாளர் ஆஷிஷ் அகர்வால், பத்திரிகையாளர் என். ராம், ஐ.ஓ.பி. செயல் இயக்குனர் நுபுர் மித்ரா மற்றும் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.