முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 50 ரவுடிகள் உட்பட 364 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.8 - சென்னையில் அமைதியான குற்றமற்ற நகராக உருவாக்கும் விதத்தில் நள்ளிரவு அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சுதந்திர தினம் நெருங்கி வருவதையொட்டி நள்ளிரவு சோதனை நடைபெற்றது. இதில் ரவுடிகள், வாரண்ட் குற்றவாளிகள், 364 பேர் கைது செய்யப்பட்டனர். குடிபோதையில் வாகனம் ஓட்டிய 74 பேர்களும் சிக்கினர். சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு 1 வாரமே இருக்கும் நிலையில் சென்னையில், போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லாட்ஜூகள், தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் மேற்பார்வையில் சென்னையில் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இணை கமிஷனர்கள் சண்முக ராஜேஸ்வரன், செந்தாமரை கண்ணன், சங்கர் ஆகியோரது தலைமையில் சென்னை மாநகர் முழுவதும் விடிய விடிய சோதனை மேற்கொள்ளப்பட்டது.நேற்று இரவு மட்டும் மொத்தம் 364 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 50 பேர் ரவுடிகள் பழைய குற்றவாளிகள், வாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.  குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்ற 74 பேர்களும், சோதனையில் சிக்கினார்கள். சுதந்திர தின பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது. வருகிற 9​ந் தேதி மற்றும் 11​ந் தேதிகளில் இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது.சுதந்திர தினத்தையொட்டி, பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எழும்nullர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்