முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை அருகே கிணற்றுக்குள் கார் விழுந்து 3 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

கோவை,ஆக.8 - கோவை அருகே 200 அடி ஆழம் உள்ள தோட்டத்து கிணற்றுக்குள் மாருதி கார் பாய்ந்து விழுந்ததில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். அதேசமயத்தில் 2 சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

கோவை தொண்டாம்புத்தூர் அருகே உள்ள கரடி மடையை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 57). இவருடை மனைவி பெயர் வசந்தா மணி (53). இவர் கோவை ராஜவீதியில் நகைக்கடை வைத்துள்ளார். நகைக்கடையை மகன் திவாகர் (30) மருமகள்  மீனா (28) ஆகியோர் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பவுன்ஜித் (5) இந்திர ஜித் (3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் காரமடை அருகே உள்ள பேராம்பாளையத்தை சேர்ந்த உறவினர் சிவன்,தனது மாருதி காரில் அய்யாசாமி வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்த காரில் அய்யாசாமி மனைவி வசந்தா மணி, மருமகள் மீனா, பேரன்கள் பவுன்ஜித், இந்திரஜித், காரை ஓட்டி வந்த சிவன் ஆகியோர் கோவையில் உள்ள நகைக் கடைக்கு புறப்பட்டனர். காரை மருமகள் மீனா ஓட்டிப்பார்த்துள்ளார். பின்புறமாக காரை மீனா திருப்பும்போது கார், கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 200 அடி ஆழமுள்ள கிணற்றில் பாய்ந்தது. அலறல் சத்தம் கேட்டவுடன் அக்கம்பக்கத்தில் உள்ளோர் உடனே வந்து கயரை கட்டி கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிக்கொண்டியிருந்த 2 சிறுவர்களை மீட்டனர். வசந்தா மணி, மீனா, சிவன், ஆகியோர் பரிதாபமாக உயிரிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து 3 உடல்களை கிணற்றில் இருந்து மீட்டனர். 

இரண்டு சிறுவர்களும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்