முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக வில்வித்தை: தீபிகாகுமாரி அபாரம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஆக்டன், ஆக.8 - உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகாகுமாரி அபாரமாக செயல்பட்டு 3 வெள்ளிப்பதக்கங்களை பெற்றார். உலக வில்வித்தை போட்டி அமெரிக்காவின் ஆக்டன் நகரில் நடைபெற்றது. இதில் தங்கப்பதக்கம் பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை தீபிகா குமாரி முனைப்புடன் செயல்பட்டு இறுதிப் போட்டிவரை முன்னேறினார். பெண்களுக்கான ரிகர்வ் பிரிவு இறுதிப் போட்டியில் தீபிகாகுமாரி, சீன வீராங்கனை ஜிங் ஜங்கை எதிர்கொண்டார். தீபிகாகுமாரி மற்றும் சீன வீராங்கனை ஜிங் ஜங்கிற்கும் இடையேயான இந்த போட்டி விறுவிறுப்பாகவும் சவாலாகவும் இருந்தது. ஆனால் இறுதியில் சீன வீராங்கனை 6 - 2 என்ற புள்ளிக் கணக்கில் தங்கத்தை வென்றார். தீபிகாகுமாரிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 

அணிகளுக்கான பிரிவில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, பம்பேலா தேவி, சுவாரோ ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இறுதிப் போட்டியில் இவர்களுடன் மோதிய உக்ரைன் அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கப்பதக்கத்தை வென்றது. 

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணியின் ஜெயந்த் தாலுக்தர் - தீபிகாகுமாரி ஜோடி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. அமெரிக்காவின் எல்லிசன் - மிராண்டா ஜோடி தங்கப்பதக்கத்தை பெற்றது. மேலும் ஆண்களுக்கான ரிகர்வ் அணி பிரிவில் இந்தியாவின் ஜெயந்த் தாலுக்தர் - சுவாரோ-விஸ்வாஸ் அடங்கிய அணி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் உக்ரைன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்