முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காளஹஸ்தி அருகே லாரி-ஜீப் மோதி 5 பேர் பலி

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

காளஹஸ்தி,ஆக.9 - திருப்பதியில் இருந்து காளஹஸ்தி சென்ற போது விபத்தில் லாரி -ஜீப் மோதியதில் சென்னையை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். சென்னை தரமணி டைட்டல் பார்க்கில் வேலை செய்து வரும் ஊழியர்கள் 7 பேர் திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றனர். திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு காளஹஸ்திக்கு சென்றனர். இதற்காக திருப்பதியில் இருந்து ஜீப்பில் நேற்று அதிகாலை காளஹஸ்தியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ரேணுகொண்டா அடுத்த ஏர்பேடுமண்டலம் சீத்தாராம் பேட்டை அருகே ஜீப் வந்த போது நெல்லூரிலிருந்து பொங்களூருக்கு தக்காளி லோடு ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் உருக்குலைந்து நொறுங்கியது.  ஜீப்பில் இருந்த சென்னையை சேர்ந்த வசீம்ராஜா, அவரது நண்பர்கள் ஜெயமூர்த்தி, சதீஷ், கார்த்தி, சதீஷ் (டிரைவர்) திருப்பதியை சேர்ந்தவர். ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 

சம்பவ இடத்திற்கு ஏற்பேடு மண்டலம் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்த அனைவரின் உடலை மீட்டு காளஹஸ்தி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த ஒரிசாவை சேர்ந்தவர் ஆகிய 3 பேரும் திருப்பதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்