முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதாவின் செல்லபிள்ளைகள்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.9 - 1 1/2 கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை என்று ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் கூறினார். நேற்று சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் பேசுகையில், போடியில்  அரசு கலை கல்லூரியை முதல்வரிடம் கேட்டு பெற்று இருக்கிறார். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர் முதல்வர் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை ஆவார்.  தேனியில் அரசு கலைக்கல்லூரி இல்லை அங்கு ஒரு அரசு கலை கல்லூரியை உருவாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் குமசேகரன் பேசும்போது நாசுக்காக ஒரு கோரிக்கையை  வைத்தார். 

அப்போது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு செல்லபிள்ளை நான் மட்டும் அல்ல அ.தி.மு.க.விலுள்ள 1 1/2 கோடி தொண்டர்களும் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளைதான் என்று கூறியபோது முதல்வர் ஜெயலலிதா உட்பட சபையில் உள்ள அனைவரும் ரசித்து சிரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்