எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, மார்ச் 4 - இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இமாலய இலக்கை சேஸ் செய்த அயர்லாந்து அணி அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு காரணமான கெவின் ஓபிரைன், நான் இதுவரை விளையாடியதிலேயே மிகச்சிறப்பான ஆட்டம் இதுதான் என்று பெருமிதமாக தெரிவித்தார்.
10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் பி பிரிவு லீக் போட்டி ஒன்று பெங்களூரு, சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் பலம் பொருந்திய இங்கிலாந்து அணி, தனது அண்டை நாடான அயர்லாந்தை சந்தித்தது. இந்த போட்டி இங்கிலாந்துக்கு சாதகமாகவே கணிக்கப்பட்டிருந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதற்கு ஏற்ப இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஸ்ட்ராஸ் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 13.3 ஓவர்களில் 91 ரன்களை சேர்த்தனர். அப்போது ஸ்ட்ராஸ் அயர்லாந்து பவுலர் டோக்ரெலின் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து களமிறங்கிய ட்ராட், பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். ஆனால் அணியின் எண்ணிக்கை 111 ஐ எட்டியபோது நன்கு விளையாடிவந்த பீட்டர்சன் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டிர்லிங்கின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஓபிரைனால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக ட்ராட்டுடன் இயான்பெல் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன் வேட்டையாடினர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அணியின் எண்ணிக்கை 288 க்கு உயர்ந்தபோது சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த பெல் 81 ரன்கள் எடுத்திருத்த நிலையில், மூனேயின் பந்தில் ஸ்டிர்லிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து சிறிது நேரத்திலேயே ட்ராட்டும் 92 பந்துகளில் 92 ரன்களை அடித்து மூனேயின் பந்தில் கிளீன்போல்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 44.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்னாக இருந்தது. அடுத்து வந்தவர்களில் கோலிங்வுட் 16 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்களை எடுத்தது. ஸ்வான் ஆட்டமிழக்காமல் 9 ரன்களை எடுத்திருந்தார். அயர்லாந்து தரப்பில் மூனே 4 விக்கெட்டுகளையும், ஜான்ஸ்ட்டன் 2 விக்கெட்டுகளையும், ஸ்டிர்லிங் மற்றும் டோக்ரெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த அயர்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியில் துவங்கியது. அந்த அணித்தலைவர் வில்லியம் போர்ட்டர் பீல்டு, இங்கி. வேகப்புயல் ஆன்டர்சனின் முதல் பந்திலேயே கிளீன்போல்டானார். இதனை அடுத்து ஸ்டிர்லிங்குடன் ஜோடி சேர்ந்த ஜோய்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் எண்ணிக்கை 62 க்கு உயர்ந்தபோது 32 ரன்களை எடுத்திருந்த ஸ்டிர்லிங், ப்ரேஸ்னன் வேகத்தில் பீட்டர்சனால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனை அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஓபிரைன் ஓரளவு ரன் உயர்வுக்கு காரணமானார். முதல் 10 ஓவர்களில் 62 ரன்களை எடுத்த அயர்லாந்து 20.2 ஓவரில் ஓபிரைன் விக்கெட்டையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. ஓபிரைன் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வான் சுழலில் வீழ்ந்தார். அடுத்து ஸ்கோர் 106 எட்டியபோது ஜாய்ஸ் விக்கெட்டை ஸ்வானே வீழ்த்தினார். இவர் 61 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். அடுத்துவந்த வில்சன் நீண்ட நேரம் நின்று 3 ரன்களே எடுத்தார். இவரும் ஸ்வான் சுழலில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அயர்லாந்து அணி 24.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. அந்த அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ஜோடி சேர்ந்த கெவின் ஓபிரைன் மற்றும் குசாக் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக விக்கெட் கீப்பர் ஓபிரைனின் சகோதரரான கெவின் ஓபிரைனின் ஆட்டத்தில் அனல் பறந்தது. கெவின் 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். இவர்கள் இருவரும் அணியின் எண்ணிக்கையை 273 க்கு கொண்டுசென்றனர். அப்போது 47 ரன்களை எடுத்திருந்த குசாக் பரிதாபமாக ரன் அவுட் ஆனார். அடுத்து மூனே, கெவினுடன் கைகோர்த்தார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். கெவின் 50 பந்துகளில் சதமடித்தார். உலக கோப்பை வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் இதுவேயாகும். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் 66 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்துவந்தது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. அணியின் எண்ணிக்கையை 317 வரை உயர்த்திய கெவின் 63 பந்துகளில் 113 ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இவரும் ரன் அவுட் முறையிலேயே ஆட்டமிழந்தார். இறுதியில் அயர்லாந்து அணி 49.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. மூனே 33 ரன்களுடனும், ஜான்ஸ்டன் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 63 பந்துகளில் 113 ரன்களை குவித்த கெவின் ஓபிரைன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உலக கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து வெற்றிபெற்ற பெருமையையும் அயர்லாந்து அணி பெற்றது.
வெற்றி குறித்து கருத்து தெரிவித்த கெவின், இதுவே நான் இதுவரை ஆடிய போட்டிகளில் எல்லாம் மிகச் சிறப்பானது என்றார். மிகச்சிறந்த பார்வையாளர்களுக்கு முன்னால், மிகப்பெரிய அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட இந்த நீண்ட இன்னிங்சை என்னால் என்றுமே மறக்க முடியாது. எதிர்மறையான எண்ணம் எதுவுமின்றி நான் செயல்பட்டேன். பந்துகளும் எனக்கு சிறப்பாக வந்தன. எல்லாமே சரியாக அமைந்தது. நாங்கள் ஆரம்பத்தில் தடுமாறினோம். நான் களமிறங்கியபோது அடிக்க வேண்டிய ரன்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. என்னுடன் ஜானும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால்தான் நாங்கள் வெற்றிபெற முடிந்தது என்றார்.
தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ், 111 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுமே நாங்கள் மிகவும் நம்பிக்கை அடைந்துவிட்டோம். ஆனால் கெவின் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து சென்றுவிட்டார். ஆனாலும் இதனால் எங்களது உலக கோப்பை கனவு தகர்ந்துவிடவில்லை. நாங்கள் மீண்டு எழுவோம் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.