முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியும் போர் குற்றவாளிதான் - வி.பி.கலைராஜன்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.11 - இலங்கை அதிபர் ராஜபக்ஷே மட்டும் அல்ல கருணாநிதியும் தான் போர் குற்றவாளி என்று வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ. பேசினார். மாபெரும் சபைகளில் சிறப்பாய் பேசுவதில் எட்மண்ட் பர்க்கை விஞ்சியவர்கள் நீங்கள் சிந்தனை ஆற்றலில் கிரேக்கத்து சாக்ரடீஸ் நீங்கள் அரசியல் சிந்தனையில் அம்மா பிளாட்டோ நீங்கள்

இளைய சமுதாயத்தை கவர்வதில் இத்தாலியின் மாஜினி நீங்கள் தத்துவ விளக்கம் தருவதிலோ அம்மா பெர்னாட்ஷா நீங்கள் மொத்தத்தில் ஆளுமை திறனில் அம்மாவுக்கு நிகர் அம்மா நீங்கள்தான் அமெரிக்க அமைச்சராக ஹிலாரி  கிளின்டன் வந்தார். எதிர்கால இந்தியாவாம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்க பொருளாதார தடை விதிக்க முதல்வர் கேட்டுக் கொண்டார் ஹிலாரியும் அதனை ஏற்றுக் கொண்டார் வென்றது அம்மா சபதம் மிரண்டது சிங்களர் கூட்டம் எட்டுத்திக்கும் வாழும் பத்து கோடி தமிழர்களும் பாதுகாக்க பிறந்த முதல்வர் ஜெயலலிதா நன்றியோடு வணங்கினர் அடுத்தவர் அம்மாவை வாழ்த்தினால் பொறாமை குணம் கொண்ட கருணாநிதிக்கு ஒப்பாறி வைக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்கு நான் செய்யாததா என்றும் கேட்டுள்ளார். ஆம் குட்டி மணி ஜகனை பிடித்து சிங்கள அரசிடம் கொடுத்தது நீங்கள்தான். இலட்சக்கணக்காண தமிழ் நெஞ்சங்கள் செத்து மடிவதற்கு இரண்டு மணிநேர உண்ணாவிரதம் நாடகம் நடத்தி போர் நிறுத்தம் என்று சொன்னது நீங்கள்தான் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டிய கொலைகார ராஜபக்ஷே வீட்டிற்கு மகள் கனிமொழியையும் நாடாளுமன்ற உறுப்பினர் சிலரையும் அனுப்பி பரிசு பொருட்களை வாங்கி மகிழ்ந்ததும் நீங்கள்தான் மொத்தத்தில் ராஜபக்ஷே மட்டுமல்ல கருணாநிதி நீங்களும் போர் குற்றவாளிதான். ஆங்கில உச்சரிப்பு; உலக தகவல்களை உதட்டு நுனியில் வைத்திருக்கும் சாமர்த்தியம். அதைப் போன்று பேரழிவை ஏற்படுத்திய சுனாமியை கையாண்ட விதம் இவற்றையெல்லாம் ஹிலாரி பாராட்டி உள்ளார் என்று அமெரிக்காவில் இருந்து வந்த பிரகாஷ் சுவாமி என்ற எழுத்தாளர் பாராட்டியுள்ளார்.

சுனாமி வந்த போது அடுத்து ஒரு சுனாமி வரப்போகிறது என்று ஆய்வாளர்கள் அறிவித்த போதும் என் தமிழ் மக்களை விட என் உயிர் எனக்கு பெரிதல்ல என்று கடற்கரைக்கு ஓடி சென்று மக்களை காப்பாற்ற முதல்வர் ஜெயலலிதா கடும் நடவடிக்கை எடுத்தார். மீட்பு நடவடிக்கையை பார்த்து அடிக்கடி சுனாமியை சந்திக்கும் ஜப்பான் அரசு அம்மாவை பாராட்டியது, இந்தோனேசியா அரசு வாழ்த்தியது, தாய்லாந்து அரசோ எங்கள் தாயின் செயல் பார்த்து போற்றி பாராட்டியது.  இலங்கை அரசோ அம்மாவை வாழ்த்தியது. பின்னர் சுனாமி பாதித்த இடங்களை பார்க்க வந்த ஐ நாவின் சிறப்பு பிரதிநிதி  அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பில் கிளின்டன் தமிழகத்தில் சுனாமி வந்த சுவடே தெரியாத அளவிற்கு  அம்மா எடுத்த  மீட்பு நடவடிக்கைகளை மனதார பாராட்டினார்.  ஆனால் சுனாமி வந்தபோதோ இந்த வாய்ஜால வித்தகர் கருணாநிதி சுனாமி தூக்கி சென்று விடுமோ என்று பயந்து மருத்துவ மனையின்மாடியில் போய் படுத்துக் கொண்டார் மகன் ஸ்டாலினோ ஒரு வாரம் அறையை விட்டு வெளியே வரவில்லை. அந்த ஸ்டாலினுக்குத்தான் முதலமைச்சருக்கு உரிய பாதுகாப்பு இன்றும் வழ்ங்கப்பட்டு வருகிறது.  அட்டை கத்திகளுக்கு எதற்கு அரசியல் பாதுகாப்பு.

இப்பொழுதும் முதலமைச்சருக்குரிய பாதுகாப்பு ஸ்டாலினுக்கு வழங்கப்படுகிறது.  இது தேவையா?  அட்டைக் கத்திக்கு எதற்கு அரசியல் பாதுகாப்பு.

கடந்த ஐந்தாண்டு காலமாக மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் இலட்சக் கணக்கில் மக்கள் வந்து போகும் தி. நகர் தொகுதியிலுள்ள பேருந்து நிலையத்தை மூன்றடுக்கு நிலையமாக மாற்ற வேண்டுமென்றும், கீழ் தளத்தில் வாகனங்கள் நிறுத்தவும், மைய தளத்தில் பேருந்து நிறுத்தவும், மேலே வணிக வளாகமும் கட்ட வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.  ஆனால் கட்டித் தரப்படவில்லை.  முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.  அதைப் போல, எனது தொகுதியில் தீயணைப்பு நிலையம் இருக்கிறது, ஆனால் அதற்கான கட்டிடம் இல்லை.  என்னுடைய அலுவலகத்தில் தான் அவர்களது அலுவலகம் செயல்படுகிறது.  தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க பணிந்து வேண்டுகிறேன். என்னுடைய தொகுதியில் சூதாட்ட கிளப்புகள் அதிகமாக உள்ளது.  அவை எல்லாம் கடந்த ஆட்சியில் அழகிரி ஆதரவோடு நடந்தது.  நான் கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தேன்.  ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.  அந்த சூதாட்ட கிளப்புகளை முடுவதற்கு முதல்வர் ஆவன செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு வி.பி.கலைராஜன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago