முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோயில் 6வது அறையில் மூலவர் ஆவிகள்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஆக.13 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 6 வது அறையை திறக்க சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு ஆய்வுக்கு சென்றது. இதற்கு மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா எதிர்ப்பு தெரிவித்தார். 6 வது அறையை திறக்கும் முன்பு தேவ பிரசன்னம் நடத்த வேண்டும் என்று கூறினார். அதன்படி தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. தந்திரிகள் நாராயணரெங்கப்பட், பத்மநாப ஷர்மா ஆகியோர் தலைமையில் நடந்த தேவ பிரசன்னத்தில் அறையை திறப்பதால் ஆபத்துக்கள் ஏற்படும் எனத் தெரிய வந்தது. 

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட நகைகள் அனைத்துமே தெய்வீக தன்மை கொண்டவை. இறைவனுக்கு மட்டுமே சொந்தமானது. அதை தொடுவது கூட பாவம். அப்படிப்பட்ட தங்க, வைர நகைகளை படம் பிடிப்பதும், மதிப்பிடுவதும் காட்சிக்கு வைப்பதும் பெரும் பாவமாகும். திறக்கப்படாத 6 வது ரகசிய அறையில் ஒரு மூலவர் சிலை இருக்கிறது. பத்மநாபசுவாமி கோயில் அமைக்கப்படுவதற்கு முன்னால் இந்த கோயில் இங்கிருந்தது. அந்த கோயிலில் இருந்த மூலவர் சிலைதான் தற்போது 6 வது அறைக்குள் இருக்கிறது. அறையை திறந்தால் மூலவரின் உக்கிர பார்வை திறப்பவரை நிர்மூலமாக்கி விடும். அவருக்கும், அவரது வம்சத்திற்கும் ஆபத்தை உருவாக்கி விடும். இந்த அறையில்தான் நரசிங்கமூர்த்தி சிலை இருக்கிறது. இது கோயிலின் பாதுகாப்பை மேற்கொள்ளும் சுவாமியாகும். இந்த சுவாமியை தாண்டி நிலவறைக்குள் யாரும் செல்லக் கூடாது என்று பிரசன்னத்தில் தெரியவந்தது. மீறி செல்பவர்கள் திவ்வயாத்மாவால் பாதிக்கப்படுவார்கள். அறைக்குள் உலவும் ஆவி அங்கிருக்கும் நகைகளை பாதுகாக்கிறது. இதற்கு காரணம் இந்த நகைகள் அனைத்தும் சுவாமிக்கு சொந்தமானது. மேலும் அறைக்குள் ஸ்ரீசக்ரமும், சாலக்கிரகங்களும் இருக்கிறது. இதை மீறி யாரும் உள்ளே பிரவேசிக்க கூடாது. இது இறைவனின் ஆணை. மேலும் ஒரு முக்கியமான விஷயம் தேவபிரசன்னத்தில் தெரியவந்துள்ளது. கோயில் மூலவர் சன்னதியில் இருந்து ரகசிய நிலவறைக்கு சுரங்கப் பாதை இருப்பதாகவும் தெரிகிறது. அங்கு கோயில் கும்பகலசங்கள் இருப்பதாகவும் பிரசன்னம் கூறுகிறது. இதுவரை கோயிலில் நடந்த தவறுகளுக்கு உடனடி பிராயசித்தம் தேட வேண்டும். தோஷ பரிகாரங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். 12 நாள் தொடர்ச்சியாக கோயிலில் முக்கால பூஜைகள் நடத்த வேண்டும். பகவதி சேவா பூஜையும் செய்ய வேண்டும். ஒரு லட்சம் திரி ஏற்றி ஹோமம் நடத்த வேண்டும். 24,000 மகா சுதர்சன ஹோமமும், சிறிய சுதர்சன ஹோமமும் நடத்தப்பட வேண்டும். கோயிலில் வேத பாராயணமும், சக்களத்து பூஜையும் மேற்கொள்ள வேண்டும். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கும் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. திருவட்டாரில் நடக்கும் பூஜையை போலவே திருவனந்தபுரம் கோயிலிலும் நடக்கும். திருவட்டாறு கோயிலில் நடக்க வேண்டிய விழாக்கள், பண்டிகைகள் ஆகியவற்றுக்கு திருவனந்தபுரம் கோயிலில்தான் நாள் குறிக்கப்படும். வருடாந்திர பூஜைகள் கூட இங்கிருந்து கூறுவதுபடிதான் நடக்கும். சில காலமாக இத்தகைய பூஜைகள் தடைபட்டுள்ளது. இனி அந்த பூஜைகளை நடத்த வேண்டும். இந்த பரிகாரங்களை மேற்கொண்டால் சுபிட்சம் ஏற்படும். இதற்கான நடவடிக்கைகளை கோயில் நிர்வாகம் உடனே தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பத்மநாபசுவாமி கோயில் நகைகளை மதிப்பிடவும், 6 வது அறையை திறக்கவும் சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு தலைவர் ஆனந்தபோசிடம் பிரசன்னத்தில் வெளியான தகவல் பற்றியும், அறையை திறக்க குழு என்ன முடிவு செய்துள்ளது என்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கருத்து சொல்ல மறுத்து விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago