எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஆக.- 16 - தமிழகத்தில் உள்ள ஏழை-எளிய மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பதே எனது அரசின் தலையாய குறிக்கோள் ஆகும் என்று கோட்டையில் சுதந்திரதின கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். நேற்று சென்னை கோட்டையில் சுதந்திரதினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து முதல்வர் ஜெயலலிதா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சுந்திரதின நல்வாழ்த்துக்களை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மூன்றாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக நான் பொறுப்பேற்றுள்ள இத்தருணத்தில், அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் வாழ்வில் வளம் ஏற்படும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை எனது அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது. வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகளில் அனைத்து தரப்பு மக்களும் தன்னிறைவு பெறுவது ஒரு சிறந்த பொருளாதாரக் கோட்பாடாகும். அந்த வகையில், மக்களின் இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், சில பொருட்களை, விலை இன்றி, எங்கள் அரசு வழங்கி வருகிறது. விலையின்றி இவ்வாறு வழங்குவதை இலவசம் என்று நாங்கள் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
ஏழை, எளியவர்களுக்கு இவ்வாறு பொருட்களை விலை இன்றி வழங்குவது மக்கள் நலன் பேணும் அரசின் கடமை ஆகும். எனவே தான், நான் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை, விலை ஏதுமின்றி வழங்க ஆணையிட்டேன்.
அதே போன்று, வாழ்வாதாரம் ஏதும் இன்றி, அன்றாட வாழ்க்கையை நடத்தவே இயலாமல் உள்ள முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித் தொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பித்தேன். இந்த அடிப்படையில் தான், பெண்களின் வாழ்க்கை வசதிக்காக மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் துவங்க உள்ளோம். ஆடம்பரத் தேவைகள் கூட அத்தியாவசியத் தேவைகளாக மாறி விட்ட இன்றைய நவீன யுகத்தில், குடும்பத் தலைவிகளின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில், மிக்ஸி மற்றும் கிரைண்டர் ஆகியவை வழங்கப்பட உள்ளன. அதே போன்று தான், அன்றாட வாழ்விற்கு அத்தியாவசியமாக விளங்கும் மின் விசிறியையும் மகளிருக்கு வழங்க உள்ளோம்.
இதேபோன்று, தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு, வேட்டிசேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை இலவசம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் திட்டமாகவும்; கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் வேலைவாய்ப்பைப் பெருக்கும் திட்டமாகவும் தான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசே வழங்கும் அதே நேரத்தில், இது ஒரு நிரந்தரத் தீர்வு என்று எனது அரசு கருதவில்லை. மக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைக்கு அரசை எப்போதும் சார்ந்து இராமல் தங்கள் சொந்தக் கால்களிலேயே நின்று, தங்களுக்குத் தேவையானதை தாங்களே வாங்கிக் கொள்ளும் அளவிற்கு அவர்களது பொருளாதார நிலை உயர வேண்டும் என்பது தான் எனது தலைமையிலான அரசின் எண்ணம் ஆகும். ஏழைகள் தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்க வேண்டுமெனில், ஏழை, எளிய மக்களைப் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்து, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவது மக்கள் அரசின் கடமை ஆகும். இந்த அடிப்படையில், ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் உன்னத நோக்கத்தோடு, வரும் ஐந்து ஆண்டுகளில் 7 லட்சம் ஏழை, எளியோருக்கு தலா 4 ஆடுகள் வழங்கும் திட்டத்தை, அதாவது 28 லட்சம் ஆடுகள் வழங்கும் திட்டத்தை எனது அரசு செயல்படுத்த உள்ளது. இந்த ஆடுகள் வழங்கும் திட்டமும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் துவக்கப்பட உள்ளது. ஏழை, எளியவர்களின் வாழ்வில் ஏற்றத்தை உருவாக்கும் இன்னொரு மகத்தான திட்டம் தான் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின்படி 5 ஆண்டுகளில், 60,000 கறவை மாடுகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களிலும் வழங்கப்படும் ஆடுகள் மற்றும் கறவை மாடுகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பயனாளிகளுக்கே வழங்கப்பட்டு, ஏழை, எளியவர்களின் உரிமை நிலை நாட்டப்படும் என்று உறுதியளிக்கின்றேன் என்று முதல்வர் ஜெயலலிதாபேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அதிகரிக்கும் வெயில் எதிரொலி: குளிர்ச்சியாக சாப்பிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் குளிர்ச்சியாக சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதார
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
மாசி வீதிகளில் வெகுவிமர்சையாக நடந்த மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
22 Apr 2024மதுரை : உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
பறவைக் காய்ச்சல் எதிரொலி: அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை விடுத்துள்ள
-
இன்சுலின் மறுக்கப்படுவதாக புகார்: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக திகார் சிறை முன் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
22 Apr 2024புதுடெல்லி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி டெல்லி திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.