முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் 3 கிராமவாசிகளை மாவோயிஸ்டுகள் கடத்தினர்

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

கயா. ஆக.- 16 - பீகார் மாநிலத்தில் 3 கிராமவாசிகளை மாவோயிஸ்டு  தீவிரவாதிகள் துப்பாக்கி  முனையில் கடத்தி  சென்றனர். பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.  இந்த மாநிலங்களில் மாவோயிஸ்டுகள்  அடிக்கடி  வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சில மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அநத கிராமத்து மக்களை உணவு கொடுக்கும்படி மிரட்டினர். ஆனால் அந்த கிராமத்தினர் யாரும் மாவோயிஸ்டுகளுக்கு உணவு  கொடுக்க மறுத்து விட்டனர். இதை அடுத்து உணவு கொடுக்க மறுத்த 3 ஆண் கிராமவாசிகளை மாவோயிஸ்டுகள் துப்பாக்கி முனையில் கடத்தி  சென்றனர். அவர்கள் எங்கே சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து கயா மாவட்ட போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் போலீசுக்கு தகவல் கொடுப்பவர்களைத்தான் மாவோயிஸ்டுகள் வழக்கமாக கடத்தி செல்வார்கள். ஆனால் இப்போது உணவு கொடுக்காததால் கிராமவாசிகளை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றிருப்பது பீகார் கிராமவாசிகளிடையே பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்