முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு மீனவர் படகுகளில் கொள்ளை சிங்கள கடற்படையினர் அட்டூழியம்

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம்,ஆக.- 16 - ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 511 விசைப் படகுகள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றிருந்தன. இந்த மீன்பிடி படகுகள் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன் பிடித்து கொண்டிருந்தது. அப்போது ஏராளமான படகுகளில் சிங்கள கடற்படையினர் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் துரத்தியடித்தனர்.  மேலும் 10 படகுகளை சுற்றி வளைத்தனர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களை கொள்ளையடித்தனர். ரூ. இரண்டரை லட்சம் மதிப்புள்ள மீன்களை கொள்ளையடித்து சென்றனர். மேலும் இப்பகுதியில் மீன் பிடிக்க வரக்கூடாது என மிரட்டி துரத்தியடித்தனர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்