முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதி-ஜெயலலிதா

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 17 - பட்டாசு தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டம், ஆவுடையாபுரம் கிராமத்திலுள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் 13.8.11 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 நபர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆவுடையாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராபியத் பீவி 13.8.11 அன்றும், ஆவுடையாபுரம் வடக்குத் தெருவை சேர்ந்த சுபைதா பீவி, செய்தூண் பீவி மற்றும் சிந்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி ஆகியோர் 14.8.11 அன்றும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன். இந்த தீ விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், விருதுநகர் மாவட்டத்திலுள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனிமேல் நிகழா வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கும், பட்டாசு தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்