தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.- 18 - ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் சிமெண்ட், மணல், ஜல்லி விலை குறையும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். நேற்று சட்டப்பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்து பேசியதாவது:- பல சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தகவல் தொழில் நுட்ப பூங்காக்காக்கள், உயிரியல் மென்பொருள் பூங்கா ஆகியவற்றை அமைக்கும் முயற்சியிலும் டிட்கோ ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டு டான்செம் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலங்குளம் சிமெண்ட் ஆலையின் உற்பத்தித்திறனை ரூபாய் 165 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தி, 2 லட்சம் டன்னிலிருந்து 4 லட்சம் டன்னாக உயர்த்தவும், அரியலூர் சிமெண்ட் ஆலையின் உற்பத்தித்திறனை ரூபாய் 350 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தி, 5 லட்சம் டன்னிலிருந்து 15 லட்சம் டன்னாக உயர்த்த,முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும் சீரிய முயற்சிகளினால், சிமெண்ட் விலை விரைவில் குறையும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையின் காரணமாக செங்கல், ஜல்லி, மணல் ஆகிய கட்டுமான பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நிறுவனங்களில், ஒரு முன்னோடி நிறுவனமாக திகழும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2002-2003-ம் ஆண்டில் காகித இயந்திரம் எண்.1, காகித இயந்திரம் எண்.2 ஆகியவற்றில் காகித உற்பத்தியை ஆண்டொன்றிக்கு 1,80,000 மெட்ரிக் டன்னிலிருந்து 2,30,000 மெட்ரிக்டன்னாக அதிகரிப்பதற்கான மேம்பாட்டு திட்டங்கள் செய்ல்படுத்தப்பட்டன. மேலும் தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி தனது ஆலையினை விரிவாக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் இயங்கிவரும் தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் மேம்படுத்த எவ்வித சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
கடந்த மாதம் மேற்கொண்ட தொழில்துறை ஆய்வுக்குபின்னர் வழங்கிய அறிவுரைகளின்படி செயல்பட்டு நடப்பாண்டில் லாபம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டொன்றுக்கு, சுமார் ஒன்றே முக்கால் லட்சம் (1.75 லட்சம்) டன்கள் உப்பு உற்பத்தி செய்யும் தமிழ்நாடு உப்பு நிறுவனம், முதல்வர் ஜெயலலிதா அறிவுரைப்படி, நடப்பாண்டில் தனது உப்பளபரப்பினை விரிவுபடுத்தவும், பணிகளை நவீனமயமாக்கவும் உள்ளது.
தமிழ்நாட்டின் கனிம வளங்களை கண்டறிந்து, அதன் அடிப்படையில் முறையன உற்பத்தி பெருக்கத்திற்கு தேவையான நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் பணிகளை தமிழ்நாடு கனிம நிறுவனம் மேற்கொள்ளும். குத்தகைக்கு விடப்பட்ட சுரங்கங்களைத் தீவிரமாக கண்காணிக்கவும், அங்கு தவறுகள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும், முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி புவியியல் மற்றும் சுரங்கத்துறையானது புலப்படங்களை கணினிமயமாக்கி, புவியியல் தகவல் முறைமை ஒன்றை உருவாக்கி, செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கும் முயற்சியில் ஈடுபடும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுதொழில் முனைவோருக்கு உதவி செய்யும் பொருட்டு, குறைந்த வட்டியில் நிதியுதவி வழங்கும் பணியில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) ஈடுபட்டுள்ளது. மேலும் சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவுகளிலிருந்து வரும், புதிய தொழில் முனைவோருக்கு பிணைய சொத்து இல்லாமல் கடன் வழங்கும் திட்டத்தினை, டிக் நிறுவனம் செம்மையாக செயல்படுத்தி வருகிறது.
கரும்பு விவசாயிகளின் நலனில் பெரும்பங்கு வகிக்கும், சர்க்கரை ஆலைகளை மேம்படுத்தி, உற்பத்தியை பெருக்குவதில் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்பேரில், பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. சர்க்கரை ஆலைகள் மேம்படுத்தப்படுவதுடன், அங்கு 183 மெகா வாட் அளவுக்கு மின்சார உற்பத்தியும் செய்யப்படும். 1991-ம் ஆண்டு முதல், முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதெல்லாம், எடுத்த முயற்சிகள் காரணமாக, இந்தியாவில், தொழில்துறையில் தமிழ்நாடு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. கார் மற்றும் கார் உதிரிபாகங்கள் தயாரிப்பில் 30 முதல் 35 விழுக்காடும், மின்னணஉ சாதனங்கள் உற்பத்தில்யில் 20 முதல் 25 விழுக்காடு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் 15 விழுக்காடும் ஜவுளி உற்பத்தியில் 20 முதல் 25 விழுக்காடும், தோல் பொருட்கல் தயாரிப்பில் 35 முதல் 40 விழுக்காடு பங்கு இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில், தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் என்ற சிறப்பு, இத்தகைய பெருமைகளை எல்லாம் தமிழ்நாட்டுக்கு பெற்றுத்தந்தவர், முதல்வர் ஜெயலலிதா என்பதை உறுதிப்பட கூறி அவையில் பதிவு செய்கிறேன்.
உலகின் மிகபெரிய பொருளாதார சக்தியான, அமெரிக்க நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரிகிளின்டன் முதல்வர் ஜெயலலிதாவின் வரலாற்று சாதனைகளை அறிந்து, தலைமைச் செயலகத்திற்கு நேரில் வந்து பாராட்டி வாழ்த்தியது என்பது, இந்திய துணைக் கண்டத்தில் உள்ள 28 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள வேறு எந்த முதல்வருக்கும் கிட்டிடாத தனிபெருஞ்சிறப்பாகும். இச்சந்திப்பின்போது, முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து விவாதித்தார்கள். உலைகத்தலைவர்களின் பார்வையை தமிழகத்தின் பக்கம் திரும்பவைத்து, மீண்டும் தமிழகத்தில் ஒரு தொழிற்புரட்சிக்கு வித்திட்டவர் ஜெயலலிதா.
இது ஒரு வரலாற்று சாதனைமிக்க நிகழ்வாகும். முதல்வர் ஜெயலலிதாவின் அரசு, தொழில்துறையில் சரித்திர சாதனை படைத்து, இந்திய துணைக் கண்டத்தில், தமிழகம் தொழில் வளர்ச்சியில் முதலிடம் பெறும் என்று உறுதி கூறி தமிழகத்தின் நிரந்த முதல்வர் ஜெயலலிதாவின் மேலான ஆலோசனை வழிக்காட்டுதலுடனும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க கீழ்கண்ட அறிவிப்புகளை தெரிவிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
-
ஆப்ரிக்க ராட்சத நத்தையால் நடுங்கும் அமெரிக்க நகரம் : மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
05 Jul 2022புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
புதிய உத்வேகத்துடன் தமிழக உயர்கல்வித்துறை: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Jul 2022கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
-
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கோஷம்: அவையை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே
05 Jul 2022கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
-
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் : டெல்லி மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
இதுவரை 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்: அக்னி வீரர்களில் பெண்கள் மட்டும் 20 சதவீதம் பேர் இருப்பர்: கடற்படை
05 Jul 2022புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்
05 Jul 2022சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
-
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகிறது வார்டு கமிட்டி, ஏரியா சபை : வழிமுறைகள் வெளியீடு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்
05 Jul 2022இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் : சிவ, சிவா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
05 Jul 2022கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
-
புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
சென்னையில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : இயக்குனர் வீரராகவ ராவ் தகவல்
05 Jul 2022சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
-
தமிழகத்தில் 98 சதவீத ரேசன் பொருட்கள் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் : உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
-
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார் பேட்டி
05 Jul 2022சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
-
நீதி போதனை வகுப்புகள் அறிமுகம்: தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
05 Jul 2022வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் மாயம்: தேடும் பணி தீவிரம்
05 Jul 2022ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
வெள்ளப் பெருக்கு: குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை : ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
05 Jul 2022தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு
-
11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான தீர்மானங்கள் வெளியானது
05 Jul 2022சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
-
தனியார் காசி யாத்திரை ரயில் மதுரையில் இருந்து வரும் 23-ம் தேதி இயக்கம்
05 Jul 2022மதுரை : பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், 2-வது தனியார் ரயில் (திவ்ய காசி-ஆடி அமாவாசை) காசி யாத்திரை ரயில் வரும் 23-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது.