தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் ஆக.- 18 - டோல்கேட் கட்டண குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்குகிறது. இதனால் நாள்தோறும் அரசு மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.3500 கோடி வருவாய் இழப்பும், நேரடியாகவும், மறைமுகமாகவும் 45 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் டோல்கேட்களில் சீரான சுங்கவசூல் செய்ய வேண்டும், லோடு ஏற்றாத லாரிகளுக்கு 25 சதவீதம் டோல் வரி விதிக்க வேண்டும், 3 நபர் இன்ஸ்சூரன்ஸ் பிரிமீயத்தை குறைக்க வேண்டும்.டீசல் விலை குறைக்க வேண்டும்,டயர் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ந் தேதி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட உத்தரவுகளை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் தென் மாநிலங்களான தமிழ்நாடு,கர்நாடகா, ஆந்திரா,கேரளா,பாண்டிச்சேரி மற்றும் மகாராஷ்டிரா என 6 மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 26 லட்சம் லாரிகள் ஈடுபடுகின்றன.
இந்த வேலை நிறுத்தத்தை முன்னிட்டு கடந்த 14 ந் தேதி முதல் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கான சரக்கு புக்கிங் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மும்பை,மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தினமும் 1000 த்திற்க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்கு லாரிகள் தினமும் செல்வது வழக்கம் இவை அனைத்தும் புக்கிங் நிறுத்தப்பட்டதால் செல்லவில்லை. இதனால் இந்த லாரிகள் மூலம் செல்லும் சரக்குகளும் தேக்கமடைந்துள்ளன.
சேலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜவ்வரிசி,தேங்காய்,வெல்லம், மேட்டூரில் இருந்து தனியார் இரும்பு நிறுவனங்களில் இருந்து இரும்பு கம்பிகள், சங்ககிரியில் இருந்து சிமெண்ட் மூட்டைகள்,கல் மாவு ஆகியவையும், ஈரோட்டில் இருந்து மஞ்சள், எண்ணெய் வகைகள்,பருப்பு வகைகளும், ஊட்டியில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும, கேரளாவிற்கும் காய்கறிகளும், நாமக்கலில் இருந்து முட்டைகளும், ஈரோடு மாவட்டம் பல்லடத்தில் இருந்து கோழி கறிகளும்,மராட்டிய மாநிலத்தில் இருந்து பருப்பு வகைகள்,கோதுமைகள்,நூல்கள்,பஞ்சு நூல்களும், பிற மாநிலங்களுக்கு நாள்தோறும் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த வேலை நிறுத்தத்தினால் கடந்த 3 தினங்களாக 6 மாநிலங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் செல்லவில்லை.இந்த லாரி ஸ்டிரைக் தொடங்கினால் 6 மாநிலங்களிலும் காய்கறிகள், முட்டைகள், பால், பருப்பு வகைகள், பஞ்சு நூல், எண்ணெய், இரும்பு கம்பிகள், சிமெண்ட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த லாரி தொழிலை நம்பி உள்ள டிரைவர், கிளீனர், லாரி உரிமையாளர்,பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், பெயிண்டர்,டிங்கர்,பாடி கட்டும் தொழில்,மெக்கானிக்குகள், ரோட்டோர தாபாக்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழிலை நம்பியுள்ள 45 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ 500 கோடி சரக்குகள் தேக்கமடையும், 6 மாநிலங்களிலும் வேலை நிறுத்தம் தொடர்வதால் அரசுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு ரூ.3500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி நிருபர்களிடம் கூறியதாவது.மத்திய அரசுடன் லாரி வேலை நிறுத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட 2 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது. இந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று தீர்க்கமான முடிவு எடுத்து அறிவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரும் முடியும் என்று கூறி நாங்கள் புறக்கணித்துவிட்டோம். திட்டமிட்டப்படி லாரி ஸ்டிரைக் இன்று நள்ளிரவு முதல் தொடங்கும் என்றார்.
மாநில பொருளாளர் சென்னகேசவன் நிருபர்களிடம் கூறுகையில்.லாரி தொழிலை பாதுகாக்கும் மத்திய அரசின் கவனத்தை எங்கள் தொழிலின் மீது பட செய்வதே எங்கள் நோக்கம். இந்திய அளவில் மாராட்டிய மாநிலத்திற்கு அடுத்து தமிழகத்தில் 1.50 லட்சம் லாரிகள் இயக்கப்படுகிறன். அதில் சேலம்,நாமக்கல்,ஈரோடு,கோவை மாவட்டங்களில் 50 சதவீதம் இயக்கப்படுகிறது. எனவே மாட்டிய,தமிழக லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டாலே நாடு முழுவதும் சரக்கு பரிமாற்றம் தடைப்படும். இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் அவரிடத்திலும் கோரிக்கை வைத்துள்ளோம்
இந்த லாரிகள் வேலை நிறுத்தத்தில் மணல் லாரிகள், டேங்கர் லாரிகள் உள்பட அனைத்து தரப்பு சரக்கு லாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. அத்தியாவசிய லாரிகளான மருந்து,குடிதண்ணீர், பால்,ரேசன் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு இந்த ஸ்டிரைக்கில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
-
ஆப்ரிக்க ராட்சத நத்தையால் நடுங்கும் அமெரிக்க நகரம் : மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
05 Jul 2022புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
புதிய உத்வேகத்துடன் தமிழக உயர்கல்வித்துறை: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Jul 2022கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
-
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கோஷம்: அவையை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே
05 Jul 2022கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
-
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் : டெல்லி மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
இதுவரை 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்: அக்னி வீரர்களில் பெண்கள் மட்டும் 20 சதவீதம் பேர் இருப்பர்: கடற்படை
05 Jul 2022புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்
05 Jul 2022சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
-
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகிறது வார்டு கமிட்டி, ஏரியா சபை : வழிமுறைகள் வெளியீடு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்
05 Jul 2022இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் : சிவ, சிவா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
05 Jul 2022கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
-
புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
சென்னையில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : இயக்குனர் வீரராகவ ராவ் தகவல்
05 Jul 2022சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
-
தமிழகத்தில் 98 சதவீத ரேசன் பொருட்கள் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் : உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
-
நீதி போதனை வகுப்புகள் அறிமுகம்: தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார் பேட்டி
05 Jul 2022சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
-
அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
05 Jul 2022வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் மாயம்: தேடும் பணி தீவிரம்
05 Jul 2022ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
வெள்ளப் பெருக்கு: குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை : ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
05 Jul 2022தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு
-
போரினால் சிதைந்த உக்ரைனை மறுசீரமைக்க 750 பில்லியன் டாலர்கள் தேவை: ஜெலென்ஸ்கி
05 Jul 2022கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான தீர்மானங்கள் வெளியானது
05 Jul 2022சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.