எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 20 - ஏ.எம் - பி.எம் பாராமல் உழைக்கும் எங்கள் சி.எம் நீங்கள் என்று சட்டசபையில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.அசோக் பேசினார். சட்டபேரவையில் நேற்று உணவு கூட்டுறவு துறை மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாத்ததில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.அசோக் பேசியதாவது:- தமிழகத்திற்கு வாழ்வளிக்கும் அவர்களது கனவை, அவர்களது ஆசையை, அவர்களது இலட்சியத்தை பிரதிபலிக்கும் இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஒரு விடியல். தாயே நாள்தோறும் ஏ.எம், பி.எம் பார்க்காமல் உழைக்கும் எங்கள் சிஎம். நீங்கள்தான். கட்சித்தொண்டனின் உழைப்பின் உண்மையறிந்து, அவனை கரம் தூக்கி, அரியணையில் உட்காரவைத்து, அழகு பார்ப்பது தங்களால் மட்டும்தான் முடியும்.
ஆம் ஏழை விவசாயி மகனாய், முகவை மண்ணில், கரிசல் காட்டில் பிறந்த என்னை முதலில் தங்கள் திருநாமத்தை தாங்கிய பேரவை மன்றத்தில் செயலாளராக விதையை விதைத்தீர்கள்.
2006 மாநகராட்சி தேர்தலின்போது என் மனைவிக்கு 153-வது வார்டில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்தபோது, என் மீது பொய் வழக்குபோட்டு, சிறைச்சாலையில் அடைத்து கொடுமைகள் செய்த வேளச்சேரியில் குடியிருந்த மு.க.ஸ்டாலின். கழகத்தின் சீரிய எழிச்சியால் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தென் சென்னை மாவட்டம், வேளச்சேரி தொகுதியை விட்டு அஞ்சி, நடுங்கி ஓடிப்போனார்.
உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதையும், இந்தியாவிற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கும் மதுகெலும்பாக இருக்கின்ற விவசாயத்திற்கு முதல் கட்டப் பணிகளுக்காக 60 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வேளாண் விவசாயிகளின் வயலில் நீர் பாய்ச்சியது போல, வயிற்றில் பால் வார்த்தது போல, இதனால் சென்ற ஆண்டு வேளாண் உற்பத்தியான 85.35 லட்சம் மெட்ரிக் டன் என்பதைவிட இந்த ஆண்டு 115 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு தேசத்தின் முதுகெலும்பு கிராமத்திலுள்ளது என்று கனவு கண்டார் மகாத்மா காந்தி. அந்த காந்தியின் கனவை நினைவாக்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை உச்ச வேளாண் பருவத்தின் போது விவசாய வேலைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட்டத்தை தீட்டியுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் ஆற்றலுக்கு மற்றுமொறு மனிமகுடமாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாதகமாக வெளியே எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலை போடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா அது முற்றிலும் புதிது உலகிலேயே அரிது.
நாம் நடைமுறைப்படுத்துவதை பார்த்து பிளாஸ்டிக் கழிவுகளை நமது நாடுகளுக்கு அனுப்பும் அமெரிக்கா. ஜெர்மனி போன்ற நாடுகளும் அதை நடைமுறைப்படுத்த முன்வரலாம். முன்வர வேண்டும். அதேபோல திடக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை. எவரும் யோசித்திராத அறிவியல் திட்டம் இது. அதை நடைமுறைப்படுத்த ஹெலிகாப்டரில் இந்த சென்னை மாநகர் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா ஒரு சுற்று பார்வையிட்டு வந்திருக்கிறார்.
சென்னை மாநகர் சீரும் சிறப்பும் பெற நடவடிக்கை ஆரம்பித்துவிட்டார். முற்றிலும் புதிய ஓர் அணுகுமுறையை மேற்கொண்டு தமிழகத்தில் தொழிற்பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சோதனைகளையும் வேதனைகளையும் சாதனைகளாக்கி வெற்றிப் பெறுறவது ஜெயலலிதாக்கே உள்ள தனித்தகுதி. முதல்வர்ஜெயலலிதா எடுத்த காரியம் யாவினும் வெற்றிதான்.
மற்ற மாநிலங்களும் கடைப்பிடிக்கும் அளவுக்கு அத்திட்டம் இருக்கும். ஏனெனில் ஜெயலலிதா மக்களின் நாடித் துடிப்பை அறிந்த டாக்டர். பிறரைப்போல பல்கலைக்கழங்களை சும்மா நச்சரித்து டாக்டர் பட்டம் பெற்றவர் அல்ல. அவர் ஆக்கப்பூர்வமாக யோசிப்பவர். நடைமுறை எதார்த்தத்தை பார்கிறவர்கள். ஆகவே தான் மாணவ மாணவியருக்கு 4 செட் யூனிபார்ம் மற்றும் காலணிகள் என்று அறிவித்திருக்கிறார்.இந்த பட்ஜெட்டில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து அதற்கான நிதியையும் ஒதுக்கி இந்த நலத்திட்டங்களும் சலுகைகளும் சேர வேண்டியவர்களுக்கு சேருகிறதா என்று கண்காணித்து செயல்படுத்துவதற்காக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை என்று ஒரு துறையை ஏற்படுத்தி திட்டத்தை செயல்படுத்தினால் மட்டும் போதாது அது சம்மந்தமான ஆலோசனையையும் கருத்துக்களையும் அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென்று அறிவுறுத்தி இருப்பது முதல்வர் ஜெயலலிதாவின் சிந்தனைக்கும், செயலுக்கும், ஆற்றலுக்கும், ஓர் எடுத்துக்காட்டாடு.
முதல்வரிடம் சில விண்ணப்பங்கள்:
வேளச்சேரி ஏரியை தூய்மைப்படுத்தி, படகு குழாயாக மாற்றி சுற்றுலா தலமாக அமைக்க வேண்டுகிறேன், போக்குவரத்து நெரிசலை போக்க திருவான்மியூர் எல்.பி.ரோடு சிக்னல் மற்றும் வேளச்சேரி - விஜயநகரம் சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைத்து தருமாறு வேண்டுகிறேன், வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட அடையாறு, திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி பகுதி குடிசை வாழ் மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் வாயிலாக பல ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டு கிரய பத்திரம் வழங்கப்பட்டாமல் உள்ளது. கிரய பத்திரம் உடனே கிடைக்க ஆவண செய்யுமாறு தங்கள் பொற்பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.
வேளச்சேரி தொகுதியில் இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட திருக்கோவில்களுக்கு சொந்தமான தற்போது பயன்பாட்டில் இல்லாத காலி நிலங்களில் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் ஏற்படுத்தி திருக்கோவிலின் வருவாயை பெருக்கிட வழிவகை செய்ய வேண்டுமாய் வேண்டுகிறேன்.
இஸ்லாமிய சகோதரர்களின் நெடுநாள் கோரிக்கையான அடக்கஸ்தலத்திற்கு வெயிலும், மழையிலும் சுமார் 15 கி.மீ தொலைவு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வாகன செலவு சுமார் ரூ.5 ஆயிரத்தை தொடுகிறது. ஏழை, எளிய இஸ்லாமிய சகோதரர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். ஆகையால் வேளச்சேரி தொகுதியிலேயே அவர்களுக்கு அடக்கஸ்தலம் அமைத்து தருமாறு வேண்டுகிறேன்.
தென் சென்னை மாவட்டத்திற்கென ஒரு அரசு பொது மருத்துவமனையை உருவாக்கி அதை வேளச்சேரி தொகுதியில் அமைக்க வேண்டுகிறேன். 2006 மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.வினர் மீது போடப்பட்ட வழக்கில் இதுவரை எந்த நடடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. நடவடிக்கை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். வேளச்சேரி இரயில் நிலையம் அருகில் பேருந்து நிலையத்துடன் அடுக்ககாக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
வேளச்சேரி புவனேஸ்வரி நகர் பகுதியில் வசிப்பவர்கள் கடந்த ஆட்சியில் போலி பத்திரப்பதிவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, தனது சொந்த நிலங்களுக்கு பட்டா வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். இதனால் இந்த பகுதிய மறு நில அளவை செய்து உரியவர்களுக்கு நிலம் கிடைக்க தக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.