தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.- 20 - ஏ.எம் - பி.எம் பாராமல் உழைக்கும் எங்கள் சி.எம் நீங்கள் என்று சட்டசபையில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.அசோக் பேசினார். சட்டபேரவையில் நேற்று உணவு கூட்டுறவு துறை மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாத்ததில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.அசோக் பேசியதாவது:- தமிழகத்திற்கு வாழ்வளிக்கும் அவர்களது கனவை, அவர்களது ஆசையை, அவர்களது இலட்சியத்தை பிரதிபலிக்கும் இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஒரு விடியல். தாயே நாள்தோறும் ஏ.எம், பி.எம் பார்க்காமல் உழைக்கும் எங்கள் சிஎம். நீங்கள்தான். கட்சித்தொண்டனின் உழைப்பின் உண்மையறிந்து, அவனை கரம் தூக்கி, அரியணையில் உட்காரவைத்து, அழகு பார்ப்பது தங்களால் மட்டும்தான் முடியும்.
ஆம் ஏழை விவசாயி மகனாய், முகவை மண்ணில், கரிசல் காட்டில் பிறந்த என்னை முதலில் தங்கள் திருநாமத்தை தாங்கிய பேரவை மன்றத்தில் செயலாளராக விதையை விதைத்தீர்கள்.
2006 மாநகராட்சி தேர்தலின்போது என் மனைவிக்கு 153-வது வார்டில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்தபோது, என் மீது பொய் வழக்குபோட்டு, சிறைச்சாலையில் அடைத்து கொடுமைகள் செய்த வேளச்சேரியில் குடியிருந்த மு.க.ஸ்டாலின். கழகத்தின் சீரிய எழிச்சியால் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தென் சென்னை மாவட்டம், வேளச்சேரி தொகுதியை விட்டு அஞ்சி, நடுங்கி ஓடிப்போனார்.
உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதையும், இந்தியாவிற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கும் மதுகெலும்பாக இருக்கின்ற விவசாயத்திற்கு முதல் கட்டப் பணிகளுக்காக 60 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வேளாண் விவசாயிகளின் வயலில் நீர் பாய்ச்சியது போல, வயிற்றில் பால் வார்த்தது போல, இதனால் சென்ற ஆண்டு வேளாண் உற்பத்தியான 85.35 லட்சம் மெட்ரிக் டன் என்பதைவிட இந்த ஆண்டு 115 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு தேசத்தின் முதுகெலும்பு கிராமத்திலுள்ளது என்று கனவு கண்டார் மகாத்மா காந்தி. அந்த காந்தியின் கனவை நினைவாக்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை உச்ச வேளாண் பருவத்தின் போது விவசாய வேலைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட்டத்தை தீட்டியுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் ஆற்றலுக்கு மற்றுமொறு மனிமகுடமாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாதகமாக வெளியே எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலை போடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா அது முற்றிலும் புதிது உலகிலேயே அரிது.
நாம் நடைமுறைப்படுத்துவதை பார்த்து பிளாஸ்டிக் கழிவுகளை நமது நாடுகளுக்கு அனுப்பும் அமெரிக்கா. ஜெர்மனி போன்ற நாடுகளும் அதை நடைமுறைப்படுத்த முன்வரலாம். முன்வர வேண்டும். அதேபோல திடக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை. எவரும் யோசித்திராத அறிவியல் திட்டம் இது. அதை நடைமுறைப்படுத்த ஹெலிகாப்டரில் இந்த சென்னை மாநகர் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா ஒரு சுற்று பார்வையிட்டு வந்திருக்கிறார்.
சென்னை மாநகர் சீரும் சிறப்பும் பெற நடவடிக்கை ஆரம்பித்துவிட்டார். முற்றிலும் புதிய ஓர் அணுகுமுறையை மேற்கொண்டு தமிழகத்தில் தொழிற்பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சோதனைகளையும் வேதனைகளையும் சாதனைகளாக்கி வெற்றிப் பெறுறவது ஜெயலலிதாக்கே உள்ள தனித்தகுதி. முதல்வர்ஜெயலலிதா எடுத்த காரியம் யாவினும் வெற்றிதான்.
மற்ற மாநிலங்களும் கடைப்பிடிக்கும் அளவுக்கு அத்திட்டம் இருக்கும். ஏனெனில் ஜெயலலிதா மக்களின் நாடித் துடிப்பை அறிந்த டாக்டர். பிறரைப்போல பல்கலைக்கழங்களை சும்மா நச்சரித்து டாக்டர் பட்டம் பெற்றவர் அல்ல. அவர் ஆக்கப்பூர்வமாக யோசிப்பவர். நடைமுறை எதார்த்தத்தை பார்கிறவர்கள். ஆகவே தான் மாணவ மாணவியருக்கு 4 செட் யூனிபார்ம் மற்றும் காலணிகள் என்று அறிவித்திருக்கிறார்.இந்த பட்ஜெட்டில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து அதற்கான நிதியையும் ஒதுக்கி இந்த நலத்திட்டங்களும் சலுகைகளும் சேர வேண்டியவர்களுக்கு சேருகிறதா என்று கண்காணித்து செயல்படுத்துவதற்காக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை என்று ஒரு துறையை ஏற்படுத்தி திட்டத்தை செயல்படுத்தினால் மட்டும் போதாது அது சம்மந்தமான ஆலோசனையையும் கருத்துக்களையும் அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென்று அறிவுறுத்தி இருப்பது முதல்வர் ஜெயலலிதாவின் சிந்தனைக்கும், செயலுக்கும், ஆற்றலுக்கும், ஓர் எடுத்துக்காட்டாடு.
முதல்வரிடம் சில விண்ணப்பங்கள்:
வேளச்சேரி ஏரியை தூய்மைப்படுத்தி, படகு குழாயாக மாற்றி சுற்றுலா தலமாக அமைக்க வேண்டுகிறேன், போக்குவரத்து நெரிசலை போக்க திருவான்மியூர் எல்.பி.ரோடு சிக்னல் மற்றும் வேளச்சேரி - விஜயநகரம் சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைத்து தருமாறு வேண்டுகிறேன், வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட அடையாறு, திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி பகுதி குடிசை வாழ் மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் வாயிலாக பல ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டு கிரய பத்திரம் வழங்கப்பட்டாமல் உள்ளது. கிரய பத்திரம் உடனே கிடைக்க ஆவண செய்யுமாறு தங்கள் பொற்பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.
வேளச்சேரி தொகுதியில் இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட திருக்கோவில்களுக்கு சொந்தமான தற்போது பயன்பாட்டில் இல்லாத காலி நிலங்களில் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் ஏற்படுத்தி திருக்கோவிலின் வருவாயை பெருக்கிட வழிவகை செய்ய வேண்டுமாய் வேண்டுகிறேன்.
இஸ்லாமிய சகோதரர்களின் நெடுநாள் கோரிக்கையான அடக்கஸ்தலத்திற்கு வெயிலும், மழையிலும் சுமார் 15 கி.மீ தொலைவு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வாகன செலவு சுமார் ரூ.5 ஆயிரத்தை தொடுகிறது. ஏழை, எளிய இஸ்லாமிய சகோதரர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். ஆகையால் வேளச்சேரி தொகுதியிலேயே அவர்களுக்கு அடக்கஸ்தலம் அமைத்து தருமாறு வேண்டுகிறேன்.
தென் சென்னை மாவட்டத்திற்கென ஒரு அரசு பொது மருத்துவமனையை உருவாக்கி அதை வேளச்சேரி தொகுதியில் அமைக்க வேண்டுகிறேன். 2006 மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.வினர் மீது போடப்பட்ட வழக்கில் இதுவரை எந்த நடடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. நடவடிக்கை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். வேளச்சேரி இரயில் நிலையம் அருகில் பேருந்து நிலையத்துடன் அடுக்ககாக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
வேளச்சேரி புவனேஸ்வரி நகர் பகுதியில் வசிப்பவர்கள் கடந்த ஆட்சியில் போலி பத்திரப்பதிவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, தனது சொந்த நிலங்களுக்கு பட்டா வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். இதனால் இந்த பகுதிய மறு நில அளவை செய்து உரியவர்களுக்கு நிலம் கிடைக்க தக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
தி.மு.க அரசை பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை உள்ளது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
24 May 2022சென்னை : தி.மு.க அரசை பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
-
இந்தோ - பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக 'குவாட்' இருக்கிறது : பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்
24 May 2022டோக்கியோ : உலக அரங்கில் குவாட் அமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
-
சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை
24 May 2022வேலூர் : சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
24 May 2022சென்னை : வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது : சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
24 May 2022ஆத்தூர் : மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலம் செய்த ஆட்சியின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை பிற
-
6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு
24 May 2022சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தா
-
கொரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் மெத்தனம் கூடாது : அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்
24 May 2022சென்னை : ”கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக்கூடாது” என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்
-
கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் இருக்கக்கூடாது : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
24 May 2022மதுரை : கோவில் திருவிழாக்களில் நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என்று ம
-
வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள்
24 May 2022புது டெல்லி : வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை: அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு உத்தரவு : மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை
24 May 2022சென்னை : தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை மூ
-
பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை: இந்துக்கள் உணர்வுகளை புண்படுத்தும் வாக்கியங்கள் மட்டுமே நீக்கியுள்ளோம் : கர்நாடக கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
24 May 2022பெங்களூரு : பாடப்புத்தகத்திலிருந்து பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை.
-
பிரசாந்த் கிஷோருக்கு பதில் சுனில்: 2024 பார்லி. தேர்தலுக்கு தயாராக காங்கிரஸில் குழுக்கள் அறிவிப்பு : நாடு தழுவிய பேரணி நடத்தவும் திட்டம்
24 May 2022புதுடெல்லி : 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையாக புதிய குழுக்களை கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளா
-
மக்கள் அச்சப்பட தேவையில்லை: குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் தீவிர கண்காணிப்பு : அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி
24 May 2022கன்னியாகுமரி : மக்கள் அச்சப்பட தேவையில்லை.
-
ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கோரியதாக புகார்: பஞ்சாப் சுகாதார அமைச்சர் டிஸ்மிஸ் : முதல்வர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு
24 May 2022சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தனது அமைச்சரவையின் சுகாதார அமைச்சர் டாக்டர் விஜய் சிங்லாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்துள்ளார்.
-
3-வது நாளாக தொடர்ந்து சரிவு: இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675 ஆக குறைந்தது
24 May 2022புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675 - ஆக குறைந்துள்ளது.
-
சென்னையில் 20 நாட்களில் 18 கொலைகள்: கொலைநகராக மாறும் தலைநகர்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
24 May 2022சென்னை : சென்னையில் கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வரும், எதிரக்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
-
கேரள மாநிலத்தையே உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
24 May 2022கொல்லம் : கேரள மாநிலத்தையே உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என்று அறிவித்திருந்த நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நேற்று க
-
அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் : பிரஷாந்த் கிஷோர் கணிப்பு
24 May 2022புதுடெல்லி : பாரதிய ஜனதா கட்சியை யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியை மையப்படுத்தியே இந்தியாவின் அரசியல் இருக்கும் என்று தேர்தல்
-
சர்வதேச யோகா தினத்தில் மைசூரில் 21-ம் தேதி மக்களுடன் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு
24 May 2022புதுடெல்லி : சர்வதேச யோகா தினம்- மைசூரில் 21-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
15-18 வயதுடைய 80 சதவீத சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி: மாண்டவியா
24 May 2022புதுடெல்லி : இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறார்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை
-
டி-20 உலக கோப்பை : இந்திய அணியில் அஸ்வினை சேர்க்க வேண்டும் - கவாஸ்கர்
24 May 2022மும்பை : பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்
-
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பான செயல்பாடு: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் பாராட்டு
24 May 2022டோக்கியோ : கொரோனா தொற்றை இந்தியா சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இலங்கையில் இதுவரை இல்லாத அளவு பெட்ரோல் லிட்டர் ரூ.420-ம், டீசல் ரூ.400 ஆகவும் உயர்வு
24 May 2022கொழும்பு : இலங்கையில் நேற்று ஒரே நாளில் பெட்ரோல் விலை 24.3 வீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா : வீரேந்திர சேவாக் புகழாரம்
24 May 2022மும்பை : பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று நினைத்தேன்.
-
10-ம் வகுப்பு கணிதத்தேர்வை எழுதாத 45,618 மாணவர்கள் : தமிழக தேர்வுத்துறை தகவல்
24 May 2022சென்னை : நேற்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.