எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 21 - தமிழக முதல்வரின் சீரிய சிந்தனையால் உதித்த புதிய திட்டமான புதிய தலைமை செயலக கட்டிடத்தை ஏழைகளின் நலனுக்காக பயன்படுத்தும் சிறப்பு மருத்துவமனையாக அமைப்பது வரவேற்கத்தக்கது என்று மு.மு.க. தலைவர் டாக்டர் சேதுராமன் , தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூ.மு.க. கட்சி தலைவர் டாக்டர் சேதுராமன்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தலைமை செயலக கட்டிடத்தில், ஏழைகளுக்காக மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் அமைப்பது வரவேற்கத்தக்கது. முந்தைய அரசு கட்டிய தலைமை செயலக கட்டிடத்தை ஏழை மக்களுக்கு அர்ப்பணித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போன்று பல்துறை சிறப்பு மருத்துவமனை, சென்னையில் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நோய்களுக்கு இலவச சிகிச்சை என்பதால் தமிழகம் மட்டுல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநில மக்களும், கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும் மக்கள் சிகிச்சைக்கு வருவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி படிப்பு படித்திட டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிடுவது போல இனி தமிழ்நாட்டிலும் மருத்துவ ஆராய்ச்சி படிப்பு படித்திட அருகிலேயே அரசு மருத்துவ கல்லூரியும் அமைவதால் மருத்துவ ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதமாக அமையும்.
சுயநலத்துக்காக, தன் பெயரை தம்பட்டம் அடிப்பதற்காக கடந்த ஆட்சியில் கருணாநிதி கட்டிய கட்டிடம் இன்று ஏழைகளுக்கு உயர்தர சிகிச்சை தரும் மையமாக உருவாவதின் மூலம் முதல்வர் ஜெயலலிதா ஒரு வரலாற்று சாதனை நாயகியாக போற்றப்படுவார் என்று டாக்டர் சேதுராமன் கூறியுள்ளார்.
தமிழ்மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.ஷேக் தாவூத்:
தமிழக முதல்வர் சட்டபேரவையில் புதிதாக கட்டியுள்ள சட்டப்பேரவை வளாகம், மருத்துவமனையாக மாற்றபட வேண்டுமென்று அறிவிக்கை வெளியிட்டுயிருக்கிறார்.
இது அனைத்து தமிழக மக்களும் வரவேற்று, போற்றக்கூடிய, பாராட்டதக்க செயலாகும். முன்னாள் தி.மு.க. அரசு புதிய சட்டபேரவை கட்டிடம், அரை - குறையாக கட்டி முடித்து சட்டப்பேரவை வளாகத்தையே பார்ப்பவர்கள் எல்லாம், கேலி, கிண்டல் செய்யக்கூடிய அளவிற்கு தண்ணீர்தொட்டி என்றும், தார்பீப்பாய் என்றும் பல கோணங்களிலே விமர்ச்சிக்கத்தக்க வகையில் முற்றுபெறாமலும், செயல்பாடுகள் நடத்தப்பெற முடியாமலும், தலைமை செயலகம் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டு, செயல்பட முடியாத ஒரு நிலையை உருவாக்கி சென்றுயிருந்தார்கள்.
அதை முதல்வர் ஜெயலலிதா சரியானதொரு ஆய்வை மேற்கொண்டு, அவர்கள் வீணடித்த மக்கள் வரிப்பணத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். டெல்லியிலே அமைந்துள்ள ஏயிம்ஸ் மருத்துவமனையை போல், பல்நோக்கு மருத்துவ அமைப்புக்களை செயல்படுத்தக்கூடிய, அதிநவீன மருத்துவமனையாக, புதிய தலைமை செயலக கட்டிடம் மாற்றப்படும் என்றும், ஏ பிளாக் மருத்துவமனையாகவும், பி பிளாக் மருத்துவ கல்லூரியாகவும் செயல்படும் என்ற அறிவப்பு, இந்தியாவின் இறையாண்மையும், ஜனநாயக மக்களாட்சியும், எப்படி நடைப்பெற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள, முன்னோடியான அறிவிப்பாகும்.
மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தால் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம், மக்களின் நலனுக்காக மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியுமாக, மாற்றி அமைத்து, தமிழக மக்களின் ஏகோபித்த மாபெரும் ஜெயலலிதா தான் என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்வடிவில் நிரூபித்து காட்டியிருக்கிறார். இதை தமிழ் மாநில முஸ்லிம் லீக் உளமாற வாழ்த்தி வரவேற்கிறது.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:
கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் அவசரம் அவசரமாக கட்டத் தொடங்கி, கட்டுமானப்பணிகள் முழுமையடையாமல் அரைகுறையான நிலையில் ஆடம்பரமாக பெரும் பொருட்செலவில் துவக்க விழா கொண்டாடி, புதிய தலைமை செயலகம் என்ற பெயரில் கட்டிடம் திறக்கப்பட்டது.
ஆனால், இந்த கட்டிடம் சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள 36 துறைகளுக்கும் போதுமானதாக இல்லை என்பதையும், பயன்படுத்தக்கூடிய இடப்பரப்பு குறைவாக இருக்கிறது என்பதையும், இருவேறு கட்டிடங்களில் தலைமை செயலகம் செயல்படுவது சாத்தியமில்லை என்பதையும் கருத்தில் கொண்டு, முதல்வர் புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டமன்றமும், தலைமை செயலகமும் இயங்கட்டும் என்று முடிவெடுத்து அந்த வகையிலே சட்டமன்றமும், தலைமை செயலகமும் இயங்கி வருகிறது.
ஆனால் பலநூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், முறையாக, முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று நான் உட்பட பலரும், பல அரசியல் கட்சிகளும் கருத்துக்களை தெரிவித்ததோடு, எப்படியெல்லாம் கட்டிடத்தை பயன்படுத்தலாம் என்று ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
ஆனால், அனைவரது எண்ணங்களையும் மிஞ்சும் வகையில் முதல்வர் ஜெயலலிதா இந்த கட்டிடத்தில் ஏ பிளாக் பகுதியின் 97829 சதுர மீட்டர் பரப்பு கொண்ட இடத்தில் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக ஏழை எளிய மக்கள் பல்வேறு நோய்களுக்கும் தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாக பெரும் வகையில், பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்றை அமைக்க முடிவுசெய்து, சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு என்பதை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய அரசு முறையாக திட்டமிடாமல் அள்ளித் தெளித்தாற்போல் அமைத்த கட்டிடம் என்றாலும், அது விரயம் ஆகாமல் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சி ஒருபுறம், புதுடெல்லி ஏஐஐஎம்எஸ் மருத்துவமனைக்கு இணையாக ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில், நவீன வசதிகளுடன், சென்னை நகரின் மையப்பகுதியில், தரமான மருத்துவமனையும், அதையொட்டி பி பிளாக் கட்டிடத்தில் மருத்துவக் கல்லூரியும் அமைய இருக்கிறது என்ற மகிழ்ச்சி மறுபுறம்.
தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலை கொண்ட தரமான மருத்துவ சேவையை தாரளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வரும் ஜெயலலிதாவின் வரலாற்று சிறப்புமிக்க இன்றைய அறிவிப்பை நெஞ்சார்ந்த நன்றியுடனும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களுடனும் பாராட்டி வரவேற்கிறேன்.
இவ்வாறு தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.