முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 -வது கிரிக்கெட் டெஸ்டிலும் இங்கிலாந்தின் ஆதிக்கம் ஓங்கியது தோல்வியைத் தவிர்க்குமா இந்தியா?

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. - 21  - இந்தியாவுக்கு எதிராக லண்டனில் நடந்து வரும் 4 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்தின் ஆதிக்கம் ஓங்கியுள்ளது. இந்தப் போட்டியிலாவது இந்தியா தோல்வியைத் தவிர்க்குமா?  இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 4 -வது டெ ஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிற து. இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் இதிலும் ஓங்கியுள்ளது. அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு காத்திருக்கிறது. 

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் முதலில் பேட்டிங் செய்தனர். முதல் நாளில் மழை குறுக்கிட்டது. அன்றைய தினம் ஆட்டம் நடுவில் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத் தது.  2 -வது நாளன்று அந்த அணி ஆட்டத்தைத் தொடர்ந்தது. அவர்களுடை ய திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அதனால் இந்தியப் பந்து வீச் சாளர்களால் அவர்களை எளிதில் ஒன்றும் செய்ய முடியவில்லை. 2 -வது நாள் முழுவதும் 3 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன. இங்கி லாந்து அணி மொத்தம் 452 ரன்களைக் குவித்து விட்டது. இதன் மூலம் அதன் ஆதிக்கம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டு விட்டது. முந்தைய 3 போட்டியிலும் இதே போன்று இங்கிலாந்து வீரர்கள் அதி க ரன்களைக் குவித்தார்கள். ஆனால், இந்திய அணியால் எதிர்த்து நிற் க முடியாத நிலை ஏற்பட்டது. 

நமது அணி வீரர்கள் எந்த போட்டியிலும், எந்த இன்னிங்சிலும் ஒரு நாள் ஆட்ட நேர அளவுக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதே போன்ற நிலை இந்தப் போட்டியிலும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்ச ம் ரசிகர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. 

இன்னும் 2 நாட்கள் மீதி உள்ளன. இங்கிலாந்து அணி நேற்றும் தொட ர்ந்து ஆடியது. 500 ரன்களை எட்டிய நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டு இந்தியாவை ஆட வைக்க வாய்ப்புள்ளது. 

முந்தைய போட்டிகளை போல மிகக் குறைந்த ரன்களுக்குள் இந்திய வீரர்கள் அவுட் ஆகிவிட்டால், பாலோ ஆன் சூழ்நிலை கூட உருவாக லாம். இது தோல்விக்கு வித்திட்டுவிடும். இப்போதைய சூழ்நிலையி ல் இந்தியாவுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தான் பிரகாசமாக உள்ளது. 

இந்தப் போட்டியை வெல்ல சாத்தியம் இல்லை. நிலைத்து நின்று ஆடினால் சமன் செய்ய மட்டுமே வாய்ப்பு உள்ளது. அதை தவறவிட்டால் தோல்வி நிச்சயம். ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் பலரும் 4 போட்டிகளிலும் நாங்களே வெல்வோம் என்று சபதம் செய்து வந்துள்ளனர். 

தொடரையும், தரவரிசையில் முதல் இடத்தையும் இழந்த நிலையில், இந்திய அணி இந்த சபதத்தையாவது நிறைவேற்றவிடாமல் தடுத்தால் மட்டுமே சிறிய கெளரவம் கிடைக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்