முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா ஹசாரேவுடன் பேச்சுக்கு தயார்: காங்கிரஸ் திடீர் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,ஆக.- 21 - பலமான லோக்பால் மசோதா தொடர்பாக அண்ணா ஹசாரேவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று காங்கிரஸ் திடீரென்று அறிவித்துள்ளது. பலமான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றக்கோரி பிரபல காந்தீயவாதி அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வருகிறது. 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹசாரே தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது பலமான லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்தார். இதனையொட்டி அண்ணாஹசாரேவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அண்ணாஹசாரேயின் உண்ணாவிரதத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய கேபினட் அமைச்சர்கள் கூடி ஆலோசித்தனர். அப்போது ஹசாரேவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததாக தெரிகிறது. அண்ணா ஹசாரே தலைமையிலான சிவில் குழுவினர் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்று அரசு மற்றும் காங்கிரஸ் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்ணாஹசாரேவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் தங்களுடைய பெயர்களை கூற விரும்பவில்லை. கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் அமைச்சர்களுமான பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்