முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.5 கோடி மதிப்புள்ள மெட்ரிக் பள்ளியை கைவசப்படுத்திய ஸ்டாலின் உறவினர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

மயிலாடுதுறை,ஆக.- 22 - ரூ.5 கோடி மதிப்புள்ள மெட்ரிக் பள்ளியை கைவசப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டால் மு.க. ஸ்டாலின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக ஸ்டாலின் மனைவியின் சகோதரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  மயிலாடுதுறையை அடுத்துள்ள குத்தாலம் நகரில் பொன்ராஜ் என்பவர் தனது ரோமன் கத்தோலிக்கர் கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில் சுமார் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனது மனைவி ஸ்டெல்லா மேரியை தாளாளராகவும் அதன் செயலாளராக கிறிஸ்துவ பாதிரியார் குணசீலன் மற்றும் 2 உறுப்பினர்களுடன் செயின்மேரி என்ற பெயரில் ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியை உருவாக்கி நடத்தி வந்தார்.  இந்தநிலையில் தாளாளர் ஸ்டெல்லா மேரியின் கணவர் பொன்ராஜ் இறந்துவிட்டவுடன் இதில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் விலகிவிட்டனர். ஸ்டெல்லா மேரி, பாதிரியார் குணசீலனை செயலாளராக நியமித்து சில ஆண்டுகளாக மெட்ரிக்குலேஷன் பள்ளியை நன்றாக நடத்தி வந்தார். மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவில் வசித்து வரும் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் முன்னாள் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா சாந்தியின் சகோதரருமான ஜெயமூர்த்தியின் மாமனாரான மதன்மோகன் மேற்படி பள்ளியை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பள்ளியை நடத்தி வந்த ஸ்டெல்லா மேரியை மதன்மோகன், அவரது மருமகன் டாக்டர் ராஜமூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து ரூ.5 கோடி மதிப்புள்ள அந்த பள்ளியை ரூ.80 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கினர். அதில் செயலாளராக இருந்த பாதிரியார் குணசீலன் கையெழுத்துப்போட்டால்தான் இடத்தை வசப்படுத்த முடியும் என்பது மட்டுமல்லாது இப்பள்ளியை ரோமன் கத்தோலிக்கர் கிறிஸ்த மதத்தை சேர்ந்தவர்கள்தான் வாங்கி நடத்த முடியும். வேற்று மதத்தவர்களுக்கு இப்பள்ளியை வாங்க உரிமை இல்லை என்று சட்டப்படி பத்திரம பதிவு செய்துள்ளனர். இருந்தாலும் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மிரட்டி கைவசப்படுத்தியுள்ளனர். இதில் முக்கிய நபராக உள்ள செயலாளர் பாதிரியார் குணசீலன் ஒப்புதல் கையெழுத்திட வேண்டும். இதை எதிர்த்து பாதிரியார் குணசீலன் தி.மு.க. ஆட்சியில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால் அந்த புகார் மனுவை அன்றைய துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் மைத்துனர் ராஜமூர்த்தி கைவசப்படுத்தி அவர் நடத்திய செயலுக்கு அப்போது அரசு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். ஆட்சி மாறியதும் குணசீலன் மீண்டும் முதல்வர் ஜெயலலிதாவிடம் மு.க. ஸ்டாலின் மைத்துனர் ராஜமூர்த்தி, அவரது மாமனார் மதன்மோகன் ஆகியோர் ரூ.5 கோடி மதிப்புள்ள பள்ளியை ரூ. 80 லட்சத்திற்கு மிரட்டி கைவசப்படுத்தியதுடன் செயலாளராக இருந்த என்னை கையெழுத்துப்போடாவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டி பள்ளியை வசப்படுத்தினர் என புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரினை தமிழக முதல்வர் ஜெயலலிதா, நில அபகரிப்பு தனிப்பிரிவு காவல்துறைக்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதனை அறிந்த மதன்மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என்று மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆனால் உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை டி.எஸ்.பி. மதன்மோகன், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மதன்மோகனை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவுப்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய தலைமறைவாகியுள்ள முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மைத்துனர் ராஜமூர்த்தியையும் அவரது மனைவி ஹேமலதாவையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago