எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை ஆக.23 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (22.8.2011) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் 45 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகம் ஆகியவற்றிற்கான கட்டடங்களைக் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காவல் துறையில் பல்வேறு புதிய கட்டமைப்புகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் ஏற்படுத்தி இந்தியாவிலேயே தமிழக காவல் துறையை முதன்மையான காவல் துறையாக மாற்றுவதற்கு பல்வேறு முனைப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். சென்னை மாவட்டம் செயின்ட் தாமஸ் மவுண்ட், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் மாவட்டம் வெங்கல், திருச்சி மாவட்டம் சோமரசன்பேட்டை, அரியலூர் மாவட்டம் இரும்புலிகுறிச்சி, பெரம்பலூர் மாவட்டம் பாடலூர், மதுரை மாவட்டம் திருமங்கலம், சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி, கல்லல், புழுதிப்பட்டி மற்றும் வந்தி, திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் மற்றும் தாடிக்கொம்பு, விருதுநகர் மாவட்டம் மாரனேரி, திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை, ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அம்மாபேட்டை, திருப்ர் மாவட்டம் தளி, இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, தங்கச்சிமடம், பரமக்குடி ஆகிய இடங்களில் 6 கோடியே 59 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 காவல்நிலைய புதிய கட்டடங்களையும், காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர், கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை, தேனி மாவட்டம் உத்தமபாளையம், கோவை மாவட்டம் ஆர்.எஸ். புரம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆகிய இடங்களில் ஒரு கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 மகளிர் காவல்நிலையங்களையும் தமிழக முதலமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும் திருவள்ளூர் மாவட்டம் வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை குடியிருப்பு பகுதியில் 104 குடியிருப்புகள், சேலம் மாநகர் சூரமங்கலத்தில் 16 குடியிருப்புகள், திருவண்ணாமலை மாவட்டம் பெரனமல்லூரில் 23 குடியிருப்புகள், பெரம்பலூர் மாவட்டத்தில் 11 குடியிருப்புகள், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 20 குடியிருப்புகள், திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் 8 குடியிருப்புகள், நன்னிலத்தில் 26 குடியிருப்புகள் மற்றும் முத்துப்பேட்டையில் 3 குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் 1 குடியிருப்பு, கடையநல்லூரில் 3 குடியிருப்புகள், கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் 6 குடியிருப்புகள், நாமக்கல் மாவட்டம் வெண்ணாந்தூரில் 12 குடியிருப்புகள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆயுதப்படை குடியிருப்பில் 72 குடியிருப்புகள், ஓசூரில் 96 குடியிருப்புகள், திருப்ர் மாவட்டம் குமாரலிங்கத்தில் 7 குடியிருப்புகள், மதுரை மாவட்டம் கீழவளவில் 7 குடியிருப்புகள், கோட்டம்பட்டியில் 19 குடியிருப்புகள், காஞ்சிபுரம் மாவட்டம் பாலூரில் 23 குடியிருப்புகள், அச்சரப்பாக்கத்தில் 23 குடியிருப்புகள் என 480 புதிய காவலர் குடியிருப்புகளும், கடலூர் மாவட்டம், கேப்பர்மலைப் பகுதியில் 67 சிறைக் காவலர் குடியிருப்புகளும் புதிதாக கட்டப்பட்டுள்ளன.தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தால் 31 கோடியே 85 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேற்கண்ட 547 புதிய குடியிருப்புகளை தமிழக முதலமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். மதுரை மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலக புதிய கட்டடம், திருச்சி மாவட்டத்தில் தனிப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவுகளுக்கான புதிய அலுவலகக் கட்டடம், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலக புதிய கட்டடம், தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டின மருதூர் சோதனைச் சாவடிக்கான புதிய கட்டடம், ஈரோடு மாவட்டத்தில் ஆயுதப்படை அலுவலக புதிய கட்டடம், கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆர்.எஸ். புரம், துணை காவல் ஆணையர் அலுவலக கட்டடம் ஆகிய 6 கட்டடங்கள் 5 கோடியே 17 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதை தமிழக முதலமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் 26 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகம் ஆகியவற்றிற்கான கட்டடங்களை திறந்து வைத்த நிகழ்ச்சியில், காவல்துறையினர் மற்றும் சிறைத்துறையினருக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் குடியேறவுள்ள குடும்பத்தினர் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகம், காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், காவல் துறையின் பிற பிரிவு அலுவலகங்கள் மற்றும் சிறைத்துறையினருக்கான குடியிருப்புக் கட்டடங்களை திறந்து வைத்து பேசியதாவது:-
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட காவல் அலுவலகக் கட்டடம், 21 புதிய காவல் நிலையக் கட்டடங்கள், துறையின் பிற அலுவலகக் கட்டடங்கள், 8 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள், 480 காவலர் குடியிருப்புகள், சிறைத்துறையினருக்கான 67 குடியிருப்புகளை திறந்து வைத்ததில் உள்ளபடியே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் சிறந்த சட்டம் ஒழுங்கு நிலைமையை பராமரிப்பது எனது தலைமையில் அமைந்துள்ள அரசின் தலையாய கடமையாகும். அதன் ஒரு அங்கமாக இன்று புதியதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்களும், பிற கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. காவல்துறையில் பணியாற்றுபவர்கள் மக்களுக்கு உற்ற நண்பராகவும், ஆலோசகராகவும் மற்றும் மனிதநேயம் மிக்கவராகவும் பணியாற்ற வேண்டும் என்று காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் பொதுவாக காவல்நிலையத்திற்கு செல்லவே அச்சப்படுவார்கள்.
தமிழகத்து மகளிர் எந்தவிதமான அச்ச உணர்வுமின்றி, தயக்கமுமின்றி, காவல்நிலையங்களுக்கு சென்று தங்களுக்குள்ள குறைகளை அங்கே எடுத்துக்கூறி அவற்றிற்கு நிவாரணம் தேடவேண்டும், பரிகாரம் தேடவேண்டும் என்பதற்காகவே முதலில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை 1992 ஆம் ஆண்டு நான் தொடங்கிவைத்தேன். அதன் பின்னர் தமிழகமெங்கும் பல அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் துவக்கப்பட்டு நல்ல முறையில் செயலாற்றி வருகின்றன. இன்றைய தினம் 8 புதிய அனைத்து மகளிர் காவல்நிலையங்களின் கட்டடங்களை திறந்து வைத்ததில் நான் உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். காவலர்களுக்கான குடியிருப்புகள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே இருக்க வேண்டும், அப்போது தான் அவர்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட இயலும். இதனை கருத்தில் கொண்டு தற்பொழுது தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 480 புதிய காவலர் குடியிருப்புகளை இன்று திறந்து வைத்ததில் நான் உள்ளபடியே உவகை கொள்கிறேன். காவல்துறையினருக்கு எனது தலைமையிலான அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. காவல்துறையினர் பொதுமக்களுக்கு உற்ற நண்பாக இருந்து தங்கள் பணிகளை செவ்வனே ஆற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். சிறைதுறையினரின் குடியிருப்புக்கள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் கைதிகளை பாதுகாக்கும் பணியில் தங்களை முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுத்திக் கொள்ள முடியும். இதனை கருத்தில் கொண்டு தற்பெழுது கட்டப்பட்டுள்ள சிறைத்துறையினருக்கான 67 புதிய குடியிருப்புகளை இன்று திறந்து வைத்ததில் நான் உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் சிறைத்துறையினர் தங்கள் பணிகளை சிறந்த முறையில் ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வின்போது, செய்தி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், சிறைத் துறை தலைவர், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர், மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.