முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடரில் இருந்து ஷேவாக் - ஷர்மா விலகல்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன்,ஆக.24 - இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வீரேந்திர ஷேவாக், இஷாந்த் சர்மா ஆகியோர் விலகியுள்ளனர். தோள்பட்டை காயத்தில் இருந்து விடுபட்ட ஷேவாக்கிற்கு இப்போது காதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தொடர்ந்து தலைவலியும் வருவதால் அவர் போட்டியில் இருந்து விலகுகிறார். சிகிச்சைக்குப் பின் அவர் 2 வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். 

தோள்பட்டை சிகிச்சைக்குப் பின் ஓய்வில் இருந்தால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும், ஷேவாக் விளையாடவில்லை. 3 வது டெஸ்ட்டில் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே களம் இறங்கிய அவர், இரு இன்னிங்ஸ்களிலும் ரன் ஏதும் எடுக்கவில்லை. 4 வது டெஸ்ட் போட்டியிலும் அவர் பிரகாசிக்க முடியவில்லை. 

எனினும் ஒரு நாள் போட்டியில் அதிரடி தொடக்க வீரரான ஷேவாக் இல்லாமல் இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இஷாந்த் சர்மாவுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவராலும் 20 ஓவர் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாது. இவர்களுக்கு மாற்றாக மும்பையை சேர்ந்த பேட்ஸ்மேன் அஜிங்கிய ரெஹானே, ஜார்கண்டை சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் வருண் ஆரோன் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறுகின்றனர். இருவருமே முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி உள்ளனர். ஆரோன் இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளர். அதிகபட்சமாக 153 கி.மீ. வேகத்தில் பந்து வீசியுள்ளார். டில்லி டோர்டெவில்ஸ் அணியிலும் விளையாடியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்