முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக செஸ் போட்டியில் பங்குபெற சிறுவனுக்கு நிதியுதவி

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக்.27 -  கிரீஸ் உலக செஸ்சேம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற பார்வையற்ற சிறுவன் சாய்கிருஷணாவுக்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று 26 ம்தேதி தலைமைச் செயலகத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி செல்வன் சாய்கிருஷ்ணா கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள பார்வையற்றோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.

சென்னையைச் சேர்ந்த 15 வயது பார்வையற்ற மாற்றுத்திறனாளி செல்வன் சாய்கிருஷ்ணா அனைத்திந்திய பார்வையற்றோர் சதுரங்க சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு பார்வையற்றோர் சதுரங்கக் கழகத்தின் மூலம் நடைபெற்ற போட்டிகளில் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.  மேலும்,  கிரான்ட் மாஸ்டர் ஆகவேண்டுமென்பது தமது லட்சியம் என விளையாடி வருவதாகவும் 28.8.2011 முதல் 4.9.2011 வரை கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள பார்வையற்றோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனைத்திந்திய பார்வையற்றோர் சதுரங்க சம்மேளனம் மூலம் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்போட்டியில் கலந்து கொள்வதற்கு தேவையான நிதியுதவினை அளிக்குமாறும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனுவினை அளித்திருந்தார்.

அவரது கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி செல்வன் சாய்கிருஷ்ணா கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள பார்வையற்றோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கி வாழ்த்தினார். மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான செல்வன் சாய்கிருஷ்ணாவின் தன்னம்பிக்கையைப் பாராட்டி, அவர் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள பார்வையற்றோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி வாகை சூடி தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற தனது அவாவினையும் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, பார்வையற்ற மாற்றுத்திறனாளி செல்வன் சாய்கிருஷ்ணாவின் பெற்றோர் மற்றும் சகோதரி உடனிருந்தனர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நிதியுதவியை பெற்றுக் கொண்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி செல்வன் சாய்கிருஷ்ணா கிரான்ட் மாஸ்டர் ஆகவேண்டுமென்ற தனது லட்சியம் நிறைவேறும் வகையில் இந்த உதவியும், ஊக்கமும் அளித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்