எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.27 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 196 புதிய பேருந்துகளை வழங்கி 106 புதிய வழித் தடங்களைத் துவக்கி வைத்தார்.அப்போது விபத்தில்லாமல் பணியாற்றுங்கள் என்று டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களான, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 36 பேருந்துகள், சென்னை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 23 பேருந்துகள், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 56 பேருந்துகள், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 13 பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 63 பேருந்துகள் என மொத்தம் 196 புதிய பேருந்துகளை வழங்கினார்.
பொதுமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளுக்குப் புதிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் புதிய வழித் தடங்கள் அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை மனுக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கொடுத்திருந்தனர்.
அம்மனுக்களை பரிசீலித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கைகளை ஏற்று பொதுமக்கள் பயனடையும் வகையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 36 வழித்தடங்கள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 23 வழித்தடங்கள், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 30 வழித்தடங்கள், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 6 வழித்தடங்கள் மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 11 வழித்தடங்கள் என மொத்தம் 106 புதிய வழித்தடங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏழு புதிய பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு பேருந்தின் சாவிகளை வழங்கி வாழ்த்தி, ஓட்டுநர்கள் தங்களது பணியினை பாதுகாப்போடு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
பின்னர், தமிழக முதலமைச்சர் ஏழு புதிய பேருந்துகளைக் கொடி அசைத்து துவக்கி வைத்து பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம். தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களின் சார்பில் புதிதாக 196 பேருந்துகளை துவக்கி வைத்ததில் உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த பேருந்துகளை ஒட்டும் ஒட்டுநர்கள் பாதுகாப்பாக தங்கள் பணியினை செய்ய வேண்டும். தங்களுக்கும் அவர்களை நம்பி பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும் எந்தவிதமான ஆபத்துமின்றி நல்ல முறையில் பணியாற்ற வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொண்டு உங்கள் அனைவருக்கும் எனது இதயnullர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன் நன்றி, வணக்கம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 196 புதிய பேருந்துகளில், 106 புதிய பேருந்துகள் இன்று புதிதாக தமிழக முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட 106 வழித்தடங்களிலும், மீதமுள்ள 90 புதிய பேருந்துகள் ஏற்கெனவே உள்ள வழித்தடங்களிலும் இயக்கப்படவுள்ளன. இவ்விழாவில், போக்குவரத்துத்துறைச் செயலாளர் முகமது நசிமுதீன் வரவேற்புரையாற்றினார். சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் எஸ். பதி நன்றி தெரிவிக்கையில், பல்லாண்டு காலமாக எந்தவொரு முதலமைச்சரும் பணிமனைக்கு நேரில் வராத நிலையில் பணிமனைக்கு நேரில் வருகை தந்து 196 புதிய பேருந்துகளை வழங்கியும் 106 புதிய வழித்தடங்களை துவக்கியும் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இவ்விழாவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை பணியாளர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு