முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதனை கடவுளாக சித்தரிக்காதீர்கள் ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, செப்.- 4 - மனிதனை கடவுளாக சித்தரிக்காதீர்கள் என்று நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அண்மையில் மக்கள் இயக்கம சார்பாக நற்பணி விழாவும், வேலாயுதம் இசை வெளியீட்டு விழாவும் மதுரையில் நடந்தது. அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகுதியால் என்னை கடவுளாக சித்தரித்து போஸ்டர்கள்  ஒட்டியிருந்தனர். அதனைக் கண்ட அடுத்த கணமே அவர்களை அழைத்து இப்படியெல்லாம் போஸ்டர்கள் ஒடக்ககூடாது, அதனை அகற்றிவிடுங்கள் என்று கண்டிப்புடன் கூறினேன். என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் உடனே அதனை அகற்றிவிட்டனர். இனி இப்படிசெய்ய மாட்டோம் என்றும் உத்தரவாதம் தந்தனர். முடிந்து போன இந்த விஷயத்தை விஷமாக்க சிலர் முயல்கிறார்கள். நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை  உருவாக்கி, எங்களை பிரிக்கவோ பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது. அந்த கட்டுரையில் தேவையில்லாமல் என் திரையுலக வாழ்க்கை, சொந்த பிரச்சனை போன்றவற்றை எழுதியிருந்தது உள்நோக்கத்துடன் இருந்தது. நான் ஜாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, எங்கலை பிரிக்கவோ பிளவுபடுத்தவோ யாராலும் முடியும். அந்த கட்டுரையில் தேவையில்லாமல் என் திரையுலக வாழ்க்கை, சொந்த பிரச்சனை போன்றவற்றை எழுதியிருந்தது உள்நோக்கத்துடன் இருந்தது.
நான் ஜாதி, மத, இனத்திற்கு அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். மதுரை விழாவில் கறவை மாடுகள், கம்ப்யூட்டர்கள், தையல் மிஷின்கள் வழங்கப்பட்டு, மூன்று மாணவர்களின் முழு படிப்புக்கு உதவித் தொகையும் வழங்கினேன். தவிர, நான் ஆயிரம் பேரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன ஜாதி, என்ன மதம் என்பது எனக்கு தெரியாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் என்ன ஜாதி, மதம் என்பதும் எனக்கு தெரியாது. எனக்கு இலட்சக்கணக்கக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன ஜாதி, மதம் என்பதும் தெரியாது. ஆயிரக்கணக்கில் நற்பணி இயக்க, மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். அவர்களும் என்ன ஜாதி, மதம் என்பது தெரியாது.
எனக்கு தெரிந்ததெல்லாம், தமிழ், தமிழனம் ஒன்றேதான். ஒரு மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி ஆர்வம் மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு போஸ்டர்களோ, செய்திகளோ வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்