எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, செப். - 5 - மதுரை மாவட்டம் மேலூர் அருகே சர்க்கரைபீர் மலையில் உள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு சொந்தமான குவாரிகள் மற்றும் பினாமி குவாரிகளை தமிழக தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார். அப்போது கிரானைட் துறையில் அழகிரி பலகோடி முறைகேடு செய்திருப்பதாகவும், இந்த விஷயத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டம் தற்போது நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 5 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் அவரது மகன் துரை தயாநிதிக்கு சொந்தமான குவாரிகள் பற்றி சட்டசபையில் பேசப்பட்டது. அப்போது இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் வேலுமணி, சில குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் மத்திய அமைச்சர் அழகிரி இதற்கு மறுப்பு தெரிவித்து நோட்டீசும் அனுப்பினார். இந்நிலையில் நேற்று மதுரை மாவட்டம் மேலூருக்கு வந்த அமைச்சர் வேலுமணி, சர்க்கரைபீர் மலையில் உள்ள அழகிரி மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான குவாரிகளை பார்வையிட்டார். இதுதொடர்பாக அமைச்சர் வேலுமணியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:- சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது கனிமம் தொடர்பான முறைகேடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் என்ற முறையில் நான் பதிலளித்தேன். அப்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கனிமம் எடுத்திருப்பதாக கூறியதற்கு மறுப்பு தெரிவித்த அழகிரி, என் பெயரிலோ, என் குடும்பத்தினர் பெயரிலோ கனிமம் வெட்டி எடுக்கவில்லை என்றும், என் மீது தவறான முறையில் சட்டசபையில் பேசிய அமைச்சர் மீது வழக்கு தொடருவேன் என்றும் அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க நான் மதுரை மாவட்டத்தில் கீழவளவு சுரங்கம், கீழையூரில் உள்ள ரெங்கசாமிபுரம் சுரங்கம் மற்றும் மில்கேட் மெருகூட்டும் மையம் ஆகிய இடங்களுக்கு சென்று இன்று (நேற்று) ஆய்வு மேற்கொண்டேன். இதன் மூலம் சட்டத்திற்கு புறம்பாக தவறான முறையில் கனிமம் எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது. மத்திய அமைச்சர் அழகிரி மகன் துரைதயாநிதி மற்றும் நாகராஜன் ஆகியோர் ஒலம்பஸ் சுரங்க நிறுவனம் என்ற பெயரில் 2006 முதல் தமிழ்நாடு கனிம நிறுவனம் அருகில் பட்டா நிலத்தில் உள்ள கனிம சுரங்கத்தில் முறைகேடான முறையில் கடந்த 5 வருடங்களாக சட்டத்திற்கு புறம்பாக தவறான முறையில் தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் கற்களை வெட்டியெடுத்துள்ளனர். ஆனால் ஓராண்டுக்கு முன்பாகவே கனிமம் எடுப்பதற்கு உரிமம் முடிவுபெற்றதாக கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பே இந்த தவறான தகவலை பதிவு செய்துள்ளார்கள். மத்திய அமைச்சர் அழகிரி அனைத்து துறைகளிலும் தலையிட்டு முறைகேடு செய்துள்ளார். குறிப்பாக கிரானைட் துறையில் அதிக அளவில் பல கோடி மதிப்பில் முறைகேடு செய்துள்ளார். துறை மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு அதிக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 10 சதவீதம் அனுமதி பெற்றுவிட்டு 90 சதவீதம் அனுமதி பெறாமல் முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக கனிமச் சுரங்கம் வெட்டி எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி துறை ரீதியாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பான 15 மேற்பட்ட கனிம சுரங்கங்களுக்கு துறை மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த ஆய்வின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், ஆர்.சாமி, தமிழரசன், எம்.வி.கருப்பையா, முன்னாள் எம்.பி.ராஜன்செல்லப்பா, மாவட்ட கலெக்டர் உ.சகாயம், இணை இயக்குனர் (சென்னை) ஜெயக்குமார், தமிழ்நாடு கனிம நிறுவன பொது மேலாளர்(சென்னை) மனோகரன், கோட்ட மேலாளர் தங்கபாண்டியன், மதுரை துணை இயக்குனர் (பொறுப்பு) சையது பஷீர் அகமது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் மற்றும் பலர் உடன் சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.