முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பன்னீர்செல்வத்திடம் அ.தி.மு.க வினர் உற்சாகமாக விருப்ப மனுதாக்கல்

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

போடி, செப். - 4 - தேனி மாவட்டம், போடி நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு நிதியமைச்சரும், தேனி மாவட்ட பொறுப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் அ.தி.மு.க வினர் உற்சாகமாக விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர்.  போடி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் 1 முதல் 33 வார்டுகளுக்கும் நகர்மன்ற உறுப்பினர் பதவி மற்றும் நகர்மன்ற தலைவர் பதவிக்கும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட அ.தி.மு.க கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது விருப்ப மனுவினை தாக்கல் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து போடி நகர்மன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட, தமிழக நிதியமைச்சரும், தேனி மாவட்ட பொறுப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் தேனி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் பிரகாஷ்குமாரின் தாயார் வேலுமணி தனது விருப்ப மனுவினை அளித்தார். தேனி மாவட்ட கழக செயலாளர் தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ, போடி தொகுதி செயலாளர் போதுமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர்கள் பிரகாஷ்குமார், பாலமுரளி, சிறுபான்மை பிரிவு நிர்வாகி இஸ்மாயில், வார்டு செயலாளர்கள் முருகன், பாஸ்கரன், குமரன், உதயசுரிையன் மற்றும் மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பாசறை நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்